Skip to main content

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்கலாமா? ஆய்வுகுழுவிடம் நிலமையை சொன்ன மக்கள்!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

தமிழகஅரசு திருவையாறு அருகில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள வல்லுநர்குழுவினர் ஆய்வுசெய்தனர். அவர்களிடம் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள்  ஒவ்வொருவரும் தனித்தனியே மனுக்களை கொடுத்து அரசுக்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுத்துள்ளனர்.

 

​ sand

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசுத் திட்டமிட்டு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டது. அதற்கு  அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து, ஆற்றில் குடியேறுதல், அரசு அதிகாரிகளை சிறைப்பிடித்தல், மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்தல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அதோடு இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடுத்தனர். 

 

 

அந்த வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி, நியமிக்கப்பட்ட தமிழ்நாடு சாலைப்பிரிவு திட்ட இயக்குநர் அருண்தம்புராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கணபதி சுப்பிரமணியன்,  விலங்கியல் பேராசிரியர் புகழேந்தி  உள்ளிடோர் கொண்ட குழுவினர் விளாங்குடியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்தனர். 

 

sand

 

இதை தெரிந்துகொண்ட அப்பகுதிமக்கள் நூற்றுக்கும் அதிகமானோர், அதிகாரிகளிடம், ‘’ இங்கு குவாரி அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் மனுக்களை அளித்தனர். அதில் ’’ஐயா இங்கு மணல் குவாரி அமைத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்,  குடிநீருக்கே தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்    ஆடு, மாடுகள் பாதிப்புக்குள்ளாகும்,  நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலும் பாழாகி பல மடங்கு ஆழத்துக்குச் சென்று விவசாயம்  முழுமையாக அழிந்துவிடும். எங்கள் தொகுதியில் உள்ள அமைச்சரான வேளாண்மை துறை அமைச்சரின் சுயநல பணவெறியில் மக்களின் நலனை யோசிக்காமல், சுயநலத்துடன் செயல்படுகிறார். அவர் எங்கள் தொகுதியில் இருப்பதே சாபக்கேடாக நினைக்கிறோம், நாங்கள் அவரை நம்பவில்லை, மாறாக சட்டத்தையும் உங்களையும் நம்பியிருக்கிறோம், எங்களின் அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள் என குறிப்ப்ட்டதோடு விளக்கினர்.

 

பொதுப்பணித்துறை அதிகாரிகளோ இதைசற்றும் எதிர்ப்பார்த்திடவில்லை, இனிஎன்ன செய்வது என்கிற அடுத்தக்கட்டயோசனையில் இருக்கிறது அரசு. ஆய்வுகுழுவோ இங்கு நடந்ததை அப்படியே மேலே சமர்ப்பிப்பேன் என குறிப்பிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.