Skip to main content

அமெரிக்கா செல்லும் மாணவிக்கு முதல்கட்ட நிதி வழங்கிய ஓ.என்.ஜி.சி. நிறுவனம்! 

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த தந்தை பாதுகாப்பு இல்லாத மனநிலை பாதிக்கப்பட்ட தாயுடன் வசிக்கும் மாணவி ஜெயலெட்சுமி. 


புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கிறார். படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு, கலை, இலக்கியம், வினாடி வினா, பொது அறிவு, அறிவியல் கட்டுரைகள் படைப்பு என பன்முகத் தன்மையுடன் சிறந்து விளங்குகிறார். குடியிருந்த வீடும் கஜா புயலில் உடைந்து போனதால் சித்தப்பா கண்ணன் வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார். 

pudukkottai district govt school plus 1 woman student arrive america ongc donate fund


சில மாதங்களுக்கு முன்ப அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று அமெரிக்காவில் அடுத்த போட்டியில் கலந்து கொள்ளவும் நாசாவுக்கு செல்லவும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


இதற்கான செலவு தொகை ரூ. 1.69 லட்சத்தை மாணவி ஜெயலெட்சுமியே ஏற்க வேண்டிய நிலை. படிப்ப செலவுக்கே அரசு திறனாய்வு தேர்வு எழுதி அதில் கிடைக்கும் பரிசுத் தொகையையும், விடுமுறை நாளில் முந்திரிப் பருப்பு உடைத்து அதில் கிடைக்கும் கூலியையும் தன் படிப்பு மற்றும் தன் தம்பி படிப்பு செலவுகளையும் பார்த்துக் கொள்ளும் மாணவி எப்படி இவ்வளவு தொகையை திரட்டி அமெரிக்கா செல்ல முடியும். இவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்கீரன் இணையத்தில் அமெரிக்கா செல்லும் அரசுப் பள்ளி மாணவி.. உதவிக்கரம் நீட்டப் போவது யார்? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். சிலர் மாணவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். 
 

இந்த நிலையில் தான் மாணவியின் சாதனையை பாராட்டிய கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். மாணவியை கட்டியணைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர் அமெரிக்கா செல்ல உதவிகள் செய்வதாக உறுதி அளித்திருந்தார். 


அதன்படியே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை தொடர்பு கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவிக்கு உதவிகள் செய்ய கேட்டுக் கொண்டார். ஆட்சியரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஓ.என்.ஜி்.சி நிர்வாகம் துணைப் பொதுமேலாளர் (மனிதவளம்) ஜோசப்ராஜ் மூலம் முதல்கட்டமாக ரூ. 65,000- க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி  முன்னிலையில் மாணவி ஜெயலெட்சுமிக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பெட்லாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 
 
மற்றொரு பக்கம் செய்திகளைப் பார்த்து பலரும் மாணவிக்கு உதவி செய்ய முன்வந்து அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் அந்த மாணவிக்கு ரூ. 75 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. உதவி செய்ய காத்திருக்கும் நல்ல உள்ளங்கள் மாணவி படிக்கும் பள்ளிக்கே சென்று உதவிகளை நேரடியாக செய்யலாம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.