Skip to main content

மணல் குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

Public struggle by laying siege to the sand quarry

 

சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே கொத்தட்டை, வில்லியநல்லூர், அத்தியாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் 5க்கும் மேற்பட்ட சவுடு மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரிகள் அனைத்தும் அரசின் விதிகளை மீறிச் செயல்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு ஆழத்தில் மணலை எடுப்பதால் இப்பகுதியில் குடிநீர் பாதிப்பு ஏற்படும் எனவும் இதனைத் தடை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் அத்தியாநல்லூரில் 'கிரீன் கமர்சியல்' என்ற நிறுவனம் சவுடு மண் எடுக்க அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தை மீறி அரசுக்குச் சொந்தமான இடத்திலும் விதிகளை மீறி மணலை எடுத்து விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையறிந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குவாரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

 

இவர்கள் கலைந்து சென்ற சிறிது நேரத்தில் மணல் குவாரிக்கு 5க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்ற வந்ததால் லாரியை சிறை பிடித்தனர். பின்னர் லாரிகள் அனைத்தும் மணல் ஏற்றாமல் திரும்பிச் சென்றது. மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.