Skip to main content

24 ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கான மறைமுகத் தேர்தல் இன்று (11.01.2020) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் 24 ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்!

திருவள்ளூர் மாவட்டம்: 14 ஒன்றியங்களில் திமுக- 6, அதிமுக- 4ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 ஒன்றியங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம்: 11 ஒன்றியங்களில் திமுக-7, அதிமுக-4 ஒன்றியக்குழு தலைவர்கள் பதவிகளில் வெற்றி.

கடலூர் மாவட்டம்: 14 ஒன்றியங்களில் அதிமுக- 10, திமுக- 2ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நல்லூர், மங்களூரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம்: 12 ஒன்றியங்களில் அதிமுக- 6, திமுக- 4, அமமுக- 1 இடத்தில் வெற்றி. 

நாமக்கல் மாவட்டம்: 15 ஒன்றியங்களில் அதிமுக- 10, திமுக- 3, சுயேச்சை- 1 இடத்தில் வெற்றி. மீதமுள்ள ஒரு இடத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம்: 8 ஒன்றியங்களில் அதிமுக- 3, திமுக- 1, பாஜக- 1ல் வெற்றி. மூன்று ஒன்றியங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டம்: 6 ஒன்றியங்களில் அதிமுக- 5, திமுக- 1ல் வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, சிவகங்கையில் கண்ணங்குடி ஒன்றியத் தலைவர் பதவிகளை அமமுக கைப்பற்றியது. 

 Postponement of indirect elections in 24 unions!


மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள இடங்கள்:

திருவாரூர் மாவட்டத்தில் 15 இடங்களில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அச்சுதமங்கலம் ஊராட்சியில் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மகாராஜபுரம் ஊராட்சியில் 6 வார்டு உறுப்பினர்களில் 2 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி: கோவில்பட்டி ஒன்றியத்தில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தேர்தல் நடத்தும் அலுவலர் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தேர்தல் ஒத்திவைப்பு. 

திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் தலா 4 ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு. 

கடலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று ஒன்றியங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒரு ஒன்றியங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.