Skip to main content

பொள்ளாச்சி பயங்கரம்;நக்கீரன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கு-குவைத்தில் தமிழர்கள் போராட்டம்!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர விவகாரம் நாடு கடந்தும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. சீரழித்த குற்றவாளிகளுக்குக் கடுமையாக தண்டனையளிக்கப்பட வேண்டும் என்கிற போராட்டக் குரல்கள் அங்கே வலுக்கின்றன.

 

protest

 

protest

 

கல்லூரி மாணவிகள் மீது நடத்தப்பட்ட இந்த பாலியல் வன்கொடுமைத் தாக்குதல் அரபு நாடான குவைத் தமிழர்களைக் கொதிக்க வைத்திருக்கிறது. மார்ச் 15 வெள்ளிக் கிழமை மாலை 03.20 மணியளவில் குவைத் முர்காப், சிட்டியில் ஆர்.கே.பிரகாஷ், சதீஷ், நெல்லை மரைக்காயர் மற்றும் அலி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.

 

protest

 

அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாலியல் கொடூரத்திற்குக் காரணமானவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

 

மேலும் பொள்ளாச்சி விவகாரத்தை உலகுக்கு வெளிப்படுத்திய நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்கினை வாபஸ் பெறவேண்டும் என்றும் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குவைத் நகர செய்தியாளர்களும் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்