Skip to main content

பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் - திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

ரகத


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு குளம் நிறைந்தது. அந்தக் குளக்கரையில் கிராம பொதுமக்கள் பொங்கல் விழா நடத்தினர். இந்த விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும் தற்போதைய பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை வெளியேறச் சொல்லி அப்பகுதி திமுகவினர் கோஷம் எழுப்பினர்.

 

பின்னர் அங்கு அதிமுக மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதலும் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மோதலைத் தடுத்து நிறுத்த முயன்றனர். அதேசமயம், கூட்டத்தில் இருந்த சிலர் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்புகள் வீசினர். இதில் கூட்டத்தில் இருந்த ஒருவர் மீது செருப்பு விழுந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், " திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. காலணி வீசியது மிகவும் கண்டனத்துக்குரியது " என்று அவர் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்