Skip to main content

“போலீஸ் மிரட்டுகின்றனர் ” - கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

"Police are threatening" - Woman commits after writing letter

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே போலீஸ் மிரட்டுவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாதை பிரச்சனையின் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் நீதிபதியிடம் விசாரணைக்கு வந்த நிலையில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் பெற்று விடுதலை ஆகியுள்ளார். 

 

இதனை தொடர்ந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் குறிப்பிட்ட குடும்பத்தார் தொடர்ச்சியாக காவல்துறையிடம் கூறி மிரட்டலில் ஈடுபட்டதாக கூறி அந்த பெண் நேற்று கணவர் விவசாய வேலைக்கு சென்ற பின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் இந்த தற்கொலைக்கு அந்த குடும்பத்தாரும் காவல்துறையும் தான் காரணம் அவர்களை கைது செய்ய வேண்டும் மேலும் அந்த குறிப்பிட்ட பாதையின் பிரச்சனையை தீர்த்து வைத்தால் தான் பெண்ணின் சடலத்தை எடுக்க விடுவோம் என போராட்டம் நடத்தினர். 

 

பின்னர் காவல் துறையினர் வந்து பாதையின் பிரச்சனையினை சரி செய்த பின் பெண்ணின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்