தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க பொது முடக்கம் அலம்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொற்று பரவலின் தாக்கம் குறையத் துவங்கியது. தொற்று பரவலின் தாக்கம் குறைதலுக்கேற்ப முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்படியிருக்க, இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டாம் அலை தீவிரமாக பரவத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பின் தொற்று பரவலின் தாக்கம் குறையத் துவங்கியதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தற்போது கடற்கரைகளுக்குப் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு, பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.