Skip to main content

ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு காவல்துறை சம்மன்! 

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

OPS- EPS Police summon supporters!

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 

 

கடந்த ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 15- க்கும் மேற்பட்டோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. குறிப்பாக, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு மற்றும் தேனி மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேரில் சென்று சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாளை (19/07/2022) காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இதேபோல், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 15 பேருக்கும் தனித்தனியாக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.   

 

சார்ந்த செய்திகள்