Skip to main content

கல்லால் தாக்கி மூதாட்டி படுகொலை; நிர்வாண நிலையில் சடலம் மீட்பு

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

nn

 

பள்ளிபாளையம் அருகே, குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். அந்த வீட்டிலிருந்து நிர்வாண நிலையில் மூதாட்டியின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆனங்கூரைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (64). இவர், காடச்சநல்லூர் அருகே உள்ள பில்லுமடைக்காடு பகுதியில் குத்தகைக்கு விவசாய நிலம் வாங்கி இருந்தார்.

 

அந்த நிலத்திலேயே குடிசை போட்டு தங்கிக் கொண்டு, கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அத்துடன், வட்டித்தொழிலும் செய்து வந்தார். மே 12ம் தேதி காலை வெகுநேரமாகியும் பழனியம்மாள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு திறந்து விடாததோடு, குடிசை கதவும் சாத்தப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. அந்தப் பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் சிலர் பழனியம்மாளைத் தேடி குடிசைக்குச் சென்றனர். அங்கு பழனியம்மாள் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தார்.

 

அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் சந்திரகுமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மர்ம நபர்கள் பழனியம்மாளின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். நிர்வாணமாக சடலம் கிடந்ததால், கொலையாளிகள் அவரை பாலியல்வன்கொடுமை  செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை மோப்ப நாய் ஸ்டெபியை நிகழ்விடத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் மோப்ப நாய் சந்தேகத்திற்குரிய யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. நிகழ்விடத்தில் இருந்து ஓடிய ஸ்டெபி, முதன்மைச் சாலை வரை ஓடிச்சென்று, பிறகு அங்கேயே நின்று விட்டது. கொலையாளிகள் அந்த இடத்தில் கடைசியாக நின்று பேசிவிட்டு, கலைந்து சென்றிருக்கக் கூடும் எனத்தெரிகிறது.

 

மாவட்ட காவல்துறை எஸ்பி கலைச்செல்வன், டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோரும் நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளியைச் சேர்ந்த பாவாயம்மாள் என்பவரை, பாப்பம்பாளையம் அருகே கரும்புத் தோட்டத்தில் வைத்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். அவரும் வட்டித்தொழில் செய்து வந்தார். மேலும், கொலையான போது அவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கலாம் என அப்போது சந்தேகிக்கப்பட்டது. அதேபோன்ற உத்திதான் தற்போது பழனியம்மாள் கொலையிலும் மர்ம நபர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

 

இன்னும் பாவாயம்மாள் கொலை வழக்கிலேயே குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது மற்றொரு அதே பாணியில் மற்றொரு பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.