Skip to main content

ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு; பதறிப் போன அலுவலர்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 old woman came file petition Coimbatore Collector office fainted and fell down

வருடத்தின் அனைத்து மாதங்களும், வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 

அப்போது, கோவை ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரும் சென்றுள்ளார். இவருக்கு 81 வயது ஆகிறது. கணவனை இழந்த இந்த மூதாட்டி கடந்த சில ஆண்டுகளாகக் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தியுள்ளார். ஆனால், தற்போது அவரால் வயது மூப்பின் காரணமாக வேலைக்குச் செல்ல இயலவில்லை. இதனால், மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதியோர் உதவித்தொகை வேண்டி மனு கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் செய்வதறியாமல் தவித்த மூதாட்டி ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்துள்ளார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக அழைத்து மனுக்களைப் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், ஓரமாக அமர்ந்திருந்த மூதாட்டி திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் என அனைவரும் ஓடி வந்து மூதாட்டியை தூக்கி அமர வைத்துள்ளனர். அப்போது, மூதாட்டி சரியாக உட்கார முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். அதன் பிறகு அவரைத் தனியாக அழைத்துச் சென்று காற்றோட்டமான இடத்தில் அமர வைத்து தண்ணீர் கொடுத்துள்ளனர். பின்னர், மயக்கம் ஓரளவு தெளிந்த நிலையில் சாப்பிடாமல் வந்திருப்பார் என நினைத்து சாப்பிட ஏதாவது வேண்டுமா... என விசாரித்துள்ளனர். ஆனால் மூதாட்டியோ தான் காலையில் சாப்பிட்டுத்தான் வந்ததாக கூறியிருக்கிறார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதற்கிடையில், மூதாட்டியிடம் இருந்து அவரின் உறவினர் ஒருவரின் செல்போன் நம்பரைப் பெற்று, அவருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரின் உறவினர்களும் மருத்துவமனைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரின் கையில் வைத்திருந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் இது குறித்து ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்து அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்று மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் தற்போது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்கும்போது, ‘முதியோர், விதவைகள், ஆதரவில்லாத பெண்கள், திருமணமாகாத மகளிர் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு உதவும் பொருட்டு அவர்கள் தங்களது சிறு சிறு பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதந்தோறும் அரசு தரப்பில் உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதிகள் இருந்தும் உதவியைப் பெற முடியாமல், ஏதோ ஒரு காரணத்தால் சிலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு, இவ்வாறு கிடைக்கக் கூடிய உதவித் தொகையை எப்படி பெறுவது என்ற விபரம் கூட இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதன் பின்னர், வேறு வழியின்றி இதுபோன்று நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்களில் கலந்துகொண்டு மனு கொடுக்க வருகின்றனர்.

இவ்வாறு நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தின் போது, இதுபோன்று வயதானவர்கள் அல்லது உடல் நிலை பாதிப்போடு வருகின்றவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தேடிச் சென்று மனுவை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் அவர்கள் மறுபடியும் இங்கு வராத அளவிற்கு உடனே அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு கொடுக்கச் சென்ற மூதாட்டி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.