Skip to main content

நோ திட்டம்...! ஒன்லி ரெஸ்ட்....! தங்கத்தமிழ்செல்வன் பேட்டி!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

நெல்லை இசக்கி ரிசார்ட்டில் முகாம் கொண்டுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று காலையில் வாக்கிங் சென்றபடியே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தங்கதமிழ்செல்வன் பேசுகையில்,

 

THANGATAMIL

 

அமமுக துணை பொதுசெயலாளர் காளையார்கோவில் வருவதால்தான் இங்கு தங்கவேண்டும் என்ற திட்டத்தையே செய்தோம். இரண்டு நாள் ஆகட்டும் சிவகங்கை சந்திப்பை முடித்துவிட்டு சென்னை செல்வோம். இங்கு அமைச்சர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுவது பொய். அப்படி யாரும் வரவில்லை. 

 

இந்த தீர்ப்புக்கும் குற்றாலத்துக்கு சம்பந்தமே இல்லை. இந்த தீர்ப்பு நாளைக்கு வரலாம், அடுத்த மாதம் வரலாம் அல்லது அடுத்த வருடம்கூட வரலாம் எனவே இந்த தீர்ப்பிற்கும் குற்றாலத்திற்கு எந்த சமபந்தமும் இல்லை. சாமியை கும்பிட்டுவிட்டு ரெஸ்ட்.  நோ திட்டம் ஒன்லி ரெஸ்ட்  எனக்கூறினார்.

சார்ந்த செய்திகள்