Skip to main content

துவங்கிய நெய்தல் திருவிழா! களைகட்டும் தூத்துக்குடி! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Neythal Festival begins in Turicorin MP Kanimozhi

 

தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் நெய்தல் திருவிழா நடக்கிறது. தூத்துக்குடியின் வ.உ.சி. கல்லூரியின் மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நான்கு நாட்களும் மாலை 4.30 மணிக்கு நெய்தல் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பறையாட்டம், நையாண்டி மேளம், புலியாட்டம் என தமிழக கிராமிய கலைஞர்கள் அசத்துகிறார்கள்.

 

நெய்தல் திருவிழாவை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்துகிறது. கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கவும், மண் சார்ந்து கலைகள் மரித்துப் போகாமலிருக்கவும், அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிற வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேற்று துவக்கப்பட்ட நெய்தல் திருவிழாவைத் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி துவக்கி வைத்தார்.

 

Neythal Festival begins in Turicorin MP Kanimozhi

 

அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் நெய்தல் திருவிழா துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தத் திருவிழாவில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “தமிழக பாரம்பரியம், கலாச்சாரம், வாழ்க்கை முறை, பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களைப் பாதுகாக்க வேண்டும். அதனை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்கிற வகையில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. இதன் வழியே பாரம்பரியக் கலைகளையும் அறிந்து கொள்ளலாம்” என்றார்.

 

Neythal Festival begins in Turicorin MP Kanimozhi

 

தொடக்க விழாவில் பேசிய கனிமொழி எம்.பி., “நம்முடைய மண் சார்ந்த கலைகள் ஒரு மாபெரும் பொக்கிஷம். நம் வாழ்க்கையை இந்தக் கலைகள் அதன் உள்ளே வடிவமைத்துக் கொள்கிறது. மற்றக் கலைகள் வெளியில் இருக்கக் கூடிய தேடல்களை மதம் சார்ந்த, இறை உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடியவையாக உள்ளன. வெள்ளம், வறட்சி, வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லுதல், சின்னச் சின்ன கனவுகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்யக்கூடியது மண் சார்ந்த கலைகளே” என்றார்.

 

Neythal Festival begins in Turicorin MP Kanimozhi

 

தமிழர்களின் பாரம்பரிய பறை இசை முழக்கத்துடன் துவங்கிய நெய்தல் கிராமிய கலைத் திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாணவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி நடந்தது. இவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி காண்போர்களை வியக்கவைத்தது. ‘தேன்மொழி ராஜேந்திரன் குழு’வினரின் காவடியாட்டம், புலியாட்டக் கலைஞர்களின் மிரட்டல் ஆட்டம், காஜாமொய்தீன் குழுவினரின் சூபி பாடல்கள், டேவிட் குழுவினரின் பறையாட்டம் போன்ற ஆட்டத் திருவிழாக்கள், தமிழக மண் சார்ந்த கலைகள் மரித்துப் போகவில்லை. அவைகள் மலை போன்று ஓங்கி உயர்ந்து நிற்கின்றன என்கிற கலாச்சாரத் திருவிழாவாக தூத்துக்குடி நகரில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. மாணவ மாணவிகள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரநிதிகள் என பார்வையாளர்களின் கூட்டம் அலையடிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.