Skip to main content

ஆக்கிரமிப்பில் ஆவின் பாலகம்... பொது மக்கள் தவிப்பு!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் ஆவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் அ.தி.மு.க.வின் அமைப்புச் செ.வான நெல்லையைச் சேர்ந்த சுதா.பரமசிவன் கடந்த வாரம் திடீரென்று இவரது தலைமையைக் கொண்ட ஆவின் பாலகம் பரபரப்பான ஜனரஞ்சகமுள்ள ஜங்ஷன் சூப்பர் மார்க்கெட் பகுதியில் ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்கிற பாலகத்தின் விற்பனையகத்தை திறந்து வைத்தது. அதில் பால் சம்பந்தமான உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

உணவுப் பொருளகம் திறக்க வேண்டியது தான். ஆனால் அதன் விற்பனையகம் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு. இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்றனர் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள்.

 

nellai avin


பாலகம் அமைந்திருக்கும் பகுதி பரபரப்பான சூப்பர் மார்க்கெட்டைக் கொண்ட குறுகிய சாலை. அருகிலுள்ள ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் புதிய பேருந்து நிலையமாக அமைக்கப்படுவதால் ஏற்கனவே மக்கள் நடமாட்டம் நெருக்கமான இந்தப் பகுதியில் பாலகத்தின் ஆக்கிரமிப்பால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தவிர இரண்டும் பெரிய தியேட்டர்கள் இங்கே உள்ளதால் அன்றாடம் இதற்கு திரளும் கூட்டத்தின் போக்குவரத்தும் இங்கே தான் உள்ளது. மட்டுமல்ல, ஜங்ஷனின் முக்கியமான சாலைக்குமரன் கோவில் இந்தப் பகுதியிலிருப்பதால் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது சொக்கப்பனை பெரிய தீபம் வழக்கமாக இந்தப் பகுதியில் தான் ஏற்றப்படுவதுண்டு. அப்போது பக்தர்கள் கூட்டம் திரளும் கடந்த 10ம் தேதியன்று கார்த்திகைத் திருநாளில் சொக்கபனை மெகா தீபம் ஏற்றப்படும் போது கூட ஆக்கிரமிப்பால் அந்தப் பகுதியின் கடைகளின் முன் பகுதிகள் அகற்றப்பட்டு மிகவும் திணறிய நிலையில் தீபம் ஏற்றப்பட்டது எனவே பொது மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ள இந்தப் பகுதியின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

கடையோ, டெப்போவோ புதிதாக ஆரம்பிக்க வேண்டுமானால் மாநகராட்சியிடம் முறைப்படி முன் அனுமதிபெற வேண்டும் அந்த வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, பாலகம் விற்பனைக் கடைக்கு அனுமதி வழங்கவில்லை என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.