Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலில் நடிகை நமீதா போட்டியா?

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Namitha contest in the parliamentary elections?

 

ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு  நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று  பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ஒவ்வொரு இந்தியரும் உணர்வுப்பூர்வமான தொடர்பை மூவர்ணக் கொடியுடன் கொண்டிருப்பதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் கடுமையான உழைப்பு உத்வேகம் அளிப்பதாகவும் கூறினார். மேலும், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில், அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து, தற்போது தமிழக  பா.ஜ.க பிரமுகராக இருக்கும் நமீதா தனது கணவருடன் சென்னை தியாகராய நகரில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்தார்.அங்கு வந்த நமீதா  தபால் நிலைய அதிகாரிகளிடம் இருந்து தேசியக் கொடியை வாங்கினார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

 

அப்போது அவர், “ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இந்திய தேசியக் கொடியை எனது வீட்டு மாடியில் ஏற்றுவேன். நீங்களும் இதை செய்யுங்கள் என்று  நாட்டு மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழக முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலையின் நடைபயணம் மிகவும் நன்றாக இருக்கிறது. கூடிய விரைவில் நானும் இந்த நடைபயணத்தில்  இணைந்து கொள்ளப் போகிறேன். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பா.ஜ.க தான் ஆட்சிக்கு வ்ரும். மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்” என்று கூறினார்.

 

அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த நமீதா, “வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கலாம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.