Skip to main content

முருகன்குடி முத்துமாரியம்மன் கோயிலில் தமிழில் திருக்குடமுழுக்கு!

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Murugankudi Muthumariamman temple in Tamil!

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் முருகன்குடி, நடராசபுரத்தில்  முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டு, திருக்குடமுழுக்கு திருநன்னீ்ராட்டு விழா இன்று (13/07/2022) காலை நடைபெற்றது.

 

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் திருவில்லிப்புத்தூர் செந்தமிழ் வேள்விச் செம்மல் வே.மோகனசுந்தரம் அடிகள் தலைமையில் சிவனடியார்கள் வேள்விச் சாலை அமைத்து, தமிழ் மந்திரங்கள் ஒலிக்க, திருக்குடமுழுக்கு நன்னீராற்றுப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

Murugankudi Muthumariamman temple in Tamil!

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் முருகன்குடி, நடராசபுரத்தில்  முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டு, திருக்குட முழுக்கு திருநன்னீராட்டு விழா இன்று (13/07/2022) காலை நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் திருவில்லிப்புத்தூர் செந்தமிழ் வேள்விச் செம்மல் வே.மோகனசுந்தரம் அடிகள் தலைமையில் சிவனடியார்கள் வேள்விச் சாலை அமைத்து, தமிழ் மந்திரங்கள் ஒலிக்க, திருக்குட முழுக்கு நன்னீராற்றுப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 


கோயில் விமான கலசங்களுக்கு நன்னீர் ஊற்றும் போது மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆன்மீக அன்பர்கள், மாரியம்மன் அருளைப் பெறுவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.  சின்னஞ்சிறு முருகன்குடி சிற்றூரில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றதை பலரும் பாராட்டி சென்றனர். தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் முருகன்குடி கனரா வங்கி நகை மதிப்பீட்டாளர் மு.இரா.இரமேசு, மகேசுவரி இரமேசு பங்கேற்று பொது மக்களுக்கு உணவு வழங்கினர். நிகழ்வினை தெய்வத் தமிழ் பேரவையினரும், முருகன்குடி அருள்தரும் முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொது மக்கள் ஒருங்கிணைத்து நடத்தினர். 

 

தெய்வத் தமிழ்ப் பேரவையின் தொடர் முயற்சியால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 06/02/2022 அன்று திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்) தமிழில் குடமுழுக்கு மதுரை உயர்நீதிமன்ற ஆணைப்படி சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இன்று சிற்றூர் மாரியம்மன் கோவிலில் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.