Skip to main content

ராஜமரியாதையுடன் பெங்களுர் சிறையிலிருந்து திருச்சி வரும் கொள்ளையன் முருகன்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

 

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளைப்போனது. இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கோசல்ராமன் வழக்குப்பதிவு செய்து திருச்சி டிசி மயில்வாகணன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த மணிகண்டன், முருகனின் சகோதரி கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

murugan


 

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முருகனின் மைத்துனர் சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட அவனை அங்குள்ள வழக்குகள் தொடர்பாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
 

இதற்கிடையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மேலும் விசாரணைக்காக பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வர கோர்ட்டில் வாரண்ட் பெற்று சென்றனர்.


 

பெங்களூரு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்து திருவாரூர் முருகனை திருச்சி அழைத்து செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் கீழ் கோர்ட்டில் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, மேல்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் திருவாரூர் முருகனை விசாரணைக்காக அழைத்து செல்ல 16.11.2.19 அனுமதி கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவனை பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 

பெங்களூரு சிறையில் இருந்து 18.11.2019 திருவாரூர் முருகனை போலீசார் அழைத்து வர உள்ளனர். நாளை 19.11.2.19 திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.


 

இந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரணை செய்து கொண்டிருந்த டி.சி. மயில்வாகணன் இரண்டு நாட்களுக்கு முன்பு எஸ்.பி.யாக பதவி உயர்வு அளித்து பணிமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
 

திருச்சி போலிசார் கொள்ளையன் முருகனை போலிஸ் கஸ்டடி எடுக்க 50 நாட்கள் தொடர் முயற்சிக்கு பிறகு தற்போது தான் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. மேலும் நகைக்கடையில் கொள்ளைப்போன 28 கிலோ தங்க நகை, ஒரு கிலோ வைர நகைகளில் இதுவரை 27 கிலோ 800 கிராமை போலீசார் மீட்டனர். மீதியுள்ள ஒரு கிலோ 200 கிராம் நகைகளை பறிமுதல் செய்ய இந்த விசாரணை நடக்கிறது. மேலும் திருச்சியில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் முருகன் பெயர் தொடர்பில் இருப்பதால் ராஜமரியாதையுடன் நடத்தி அவனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்க வேண்டும் என்பதே தற்போது திருச்சி போலிசின் முக்கிய கடமையாக உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.