Skip to main content

எம்.பியின் மனைவி, மகன் கடத்தல்; சினிமா பட பாணியில் சுத்துப் போட்ட தனிப்படை

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

MP's wife, son problem; The police caught the criminals

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த எம்.வி.வி. சத்திய நாராயணா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி, மகன் சரத். இந்த நிலையில் எம்.பி சத்திய நாராயணா கடந்த புதன் கிழமை ஹைதராபாத் சென்றிருந்தார். வீட்டில் அவரது மகன் சரத் தனியாக இருந்த நிலையில் சில மர்ம கும்பல் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை கடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோதிக்கு ஃபோன் செய்து அந்த கும்பல் அவரிடம் இருக்கும் தங்க நகைகளைக் கொண்டு வந்து கொடுக்கும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் கூறிய இடத்திற்கு நகைகளுடன் வந்த ஜோதியையும் பிடித்து வைத்துக்கொண்ட மர்ம நபர்கள், பின்னர் எம்.பி. சத்திய நாராயணாவின் ஆடிட்டர் கன்னமனேனி வெங்கடேஸ்வராவுக்கு ஃபோன் செய்துள்ளனர். 

 

அவரிடம் எம்.பியின் மனைவி ஜோதி மற்றும் அவரது மகன் சரத் ஆகிய இருவரும் கடத்தப்பட்டதைக் கூறி இவர்கள் உயிருடன் வேண்டும் என்றால் ரூ.1 கோடி எடுத்துக்கொண்டு வருமாறு மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆடிட்டரும் சொன்ன பணத்தை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கும்போதே, இந்த கடத்தல் சம்பவம் குறித்து எம்.பி சத்திய நாராயணாவிற்கு தகவல் தெரியவர, உடனடியாக அவர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

 

இந்த நிலையில் கடத்தல் கும்பல் எம்.பியின் மனைவி, மகன் மற்றும் அவரது ஆடிட்டர் ஆகியோருடன் காரில் தப்பித்துச் சென்றுள்ளனர். அந்த காரை துரத்திப் பிடித்த தனிப்படை, கடத்தப்பட்ட மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்தபோது 6 பேரில் மூவரை கைது செய்துள்ளனர். இந்த கடத்தலுக்கு மூளையாக பிரபல ரவுடி ஹேமநாத் செயல்பட்டு எம்.பியின் மனைவி, மகன் மற்றும் ஆடிட்டரை கடத்தியது தெரிய வந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.