Skip to main content

பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன்: மாணவி கண்ணீர்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
rape


    
13 வயது மாணவி ஒருவர், தாயின் கள்ளக்காதலன் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீசில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கல்லப்பட்டியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
 

 

 

அப்போது போலீசாரிடம் அந்த மாணவி, எனது தாயார் ஜீவா குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எங்களது வீட்டுக்கு மாசானம் (வயது 45) என்பவர் அடிக்கடி வந்து போவார். அவர் வரும்போதெல்லாம் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார். இதனை பலமுறை என் அம்மாவிடம் சொன்னாலும், அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. 
 

கடந்த வாரம் மாசானம் என்னை பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் பாலியல் தொந்தரவு செய்தார். இதற்கு உடந்தையாக எனது தாயும் இருந்தார். நம்ம அன்கிள்தாம்மா என கூறினார். அதனால் தான் போலீசில் புகார் கொடுக்க வந்தேன் என்று கண்ணீரோடு கூறியுள்ளார். 
 

அதன் அடிப்படையில் ஜீவா, அவரது கள்ளக்காதலன் மாசானம் ஆகியோர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்