Skip to main content

சுமார் 80-க்கு மேற்பட்ட மயில்கள் மர்ம இறப்பு!!

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

மதுரை அருகே விவசாய நிலம் மற்றும் தென்னந்தோப்பு பகுதிகளில் சுமார் 80-க்கு மேற்ப்பட்ட மயில்கள், காடைகள் இறந்துதுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே கொடிக்குளம் என்ற இடத்தில் விவசாய நிலங்கள், கண்மாய், தென்னந்தோப்பு பகுதிகளில் அதிக மயில்கள் இரைதேட வரும் எனவே அந்த பகுதி விவசாயிகள் வரும் மயில்களுக்கு இடையூறு இல்லாமல் அவற்றுக்கு தீனி வைத்தும், தண்ணீர் வைத்து பாதுகாத்து வந்தனர்.

 

 mysterious deaths!

 

 

 

ஆனால் இன்று காலை அந்த பகுதியில் உள்ள கண்மாய், தென்னந்தோப்பு, வயல்களில் சுமார் 80-க்கு மேற்பட்ட மயில்கள், காடைகள் இறந்துள்ளது. இதனை கண்டு போலீசாருக்கும் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் வனத்துறையினர்  பார்வையிட்டு வருகிறன்றனர். வயலில் ஏதேனும் மருந்து வைக்கப்பட்டு அதனை உட்கொண்டு மயில்கள் இறந்ததா? என விசாரித்தும் வருகின்றனர். இப்படி 80-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.    

சார்ந்த செய்திகள்