Skip to main content

'நம்ம ஸ்கூல்' திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

jhj

 

'நம்ம ஸ்கூல்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாக  நம்ம ஸ்கூல் என்ற இந்த புதிய திட்டம் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக முதல்வர் ஒவ்வொருவரின் வசந்த காலமும் அவர்கள் பள்ளிகளில் படித்த காலம்தான் என்று தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக பேசிய அவர், " இன்றைக்கு இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இது ஒரு ஆரம்பம்தான். ஆனால் இந்த திட்டம் நிச்சயமாக எதிர்பார்த்ததை விட வெற்றிபெறும். ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்வில் வசந்த காலம் என்றால் அது அவர்களின் இளமைக்காலம்தான். குறிப்பாக அவர்கள் பள்ளியில் படித்த காலம். இந்த திட்டத்தின் மூலம் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு மாணவர்கள் உதவலாம். எல்லாவற்றையும் அரசு மட்டுமே செய்ய முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும். இந்த திட்டத்தை மாணவர்கள் நிச்சயம் வெற்றியடையச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
NEET exam question paper leak School owner arrested in Gujarat

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது. இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்க்கண்டில்  உள்ள பள்ளி ஒன்றின் முதல்வர் அசானுல் ஹக், அப்பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டிராக்டரில் சிக்கிய 8 வயது சிறுவன்; தந்தை கண் முன்னே நிகழ்ந்த சோகம் 

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
8-year-old boy trapped in tractor; The tragedy that happened before the eyes of the father

விவசாய நிலத்தை உழுத பொழுது தந்தையின் கண் முன்னே டிராக்டரில் சிக்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தது வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள குக்கலப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர்கள் தாமோதரன்-கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூன்றாம் வகுப்பு படித்து வந்த இளைய மகன் பரத்குமார் (8 வயது) இன்று விடுமுறை தினம் என்பதால் தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது தாமோதரனுக்கு சொந்தமான நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக ஆதிகேசவன் என்பவர் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது கொண்டிருந்தார்.

திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டரி பின்புற பகுதியில் சிறுவன் பரத்குமார் எறியுள்ளார். அதனை பார்க்காமல் டிராக்டர் இயக்கப்பட்டதில் சிறுவன் டிராக்டரில் சிக்கி சிறுவன் பரத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தந்தையின் கண் முன்னே எட்டு வயது சிறுவன் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இலத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.