Skip to main content

காணாமல்போன அரசுப் பள்ளி புத்தகங்கள்! தீவிர விசாரணையில் மாவட்ட கல்வி அலுவலர்! 

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

Missing Government School Books! District Education Officer under  investigation!

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலக மைய வளாகத்தில் இருந்து 8 லட்சம் மதிப்பிலான, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சுமார் 12 ஆயிரம் புத்தகங்கள் காணாமல் போயுள்ளன.

 

Missing Government School Books! District Education Officer under  investigation!

 

இதுகுறித்து ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதேசமயம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, அரசு பள்ளி பாட புத்தகங்கள் காணாமல் போனது தொடர்பாக வட்டார கல்வி அலுவலக மைய வளாகத்தின் உதவியாளர் தங்கவேல் 43, கிளர்க் திருநாவுக்கரசு 39,  ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளார். 


மேலும், ஊத்தங்கரை காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்