Skip to main content

நீலாங்கரை அடாவடிப் பேர்வழி அமைச்சரின் மகனா..? அமைச்சரே புகார் கொடுக்க, அமமுக பிரமுகர் மீது வழக்கு..!!!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

விடிந்தும், விடியாத அந்த அதிகாலைப் பொழுது அவ்வளவு ஈசியாக இருக்கவில்லை நீலாங்கரைப் போலீஸிற்கு.! எங்கிருந்தோ மிகுந்த வேகத்தில் வந்த கார் சாலையில் ஓரமாய் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோவினை இடித்து சுக்கு நூறாக்கிய நிலையில் அந்த வண்டியை இயக்கி வந்த ஹேங் ஓவர் போதைக்காரன் அங்கு கூடியிருந்த கூட்டத்தினிடமும், பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வர எண்ணிய போலீசாரிடமும் முறைத்துக் கொண்டு அடாவடியாக நடந்துக் கொண்டது வாட்ஸ் அப்பில் வைரலாக, " இந்த அமைச்சரின் மகன் தான் இவன்." என வாட்ஸ் அப்பில் வைரலானது. அமைச்சரே தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க அமமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது சைபர் கிரைம் போலீஸ்.

 Minister's son is the attacker of the police?


மதுரை வெள்ளங்குடி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் புகழேந்தி. வெளிநாட்டிற்கு பழங்களை ஏற்றுமதி செய்துவரும் இவரின் மகன் பிரச்சனைக்குரிய நீலாங்கரை அடாவடிப் பேர்வழியான நவீன். 30 வயதான நவீன் திருவான்மியூர் ராஜா சீனிவாசன் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஏற்றுமதி வியாபாரத்தைக் கவணித்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவினில் வீட்டை விட்டு சென்றவர், உற்சாகபான மயக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலைப் பொழுதில்  TN59BJ3038 பதிவெண் கொண்ட தன்னுடைய ஹூண்டாய் வெரினா காரினை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது சாலையிலிருந்த ஆட்டோவினை இடித்து சுக்கு நூறாக்கியிருக்கின்றார். அங்கிருந்த மக்கள் காரினை சூழ்ந்து கொள்ளவே, இவரும் அவர்களுடன் மல்லுக்கட்டியிருக்கின்றார். ஒருக்கட்டத்தில் இப்பிரச்சனையை சமாளிக்க நீலாங்கரை ஏட்டையா இளவரசன் மற்றும் ஒரு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார் எஸ்.எஸ்.ஐ.பழனி. ஆனால், அவர்களுடனே மல்லுக்கட்டியிருக்கின்றார் போதைப் பார்ட்டி நவீன். ஒருக்கட்டத்திற்கு பிறகு நவீனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவர் மீது 294(b).353.506(1) ipc பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் இல்லாமல் பாத்ரூமிற்கு செல்லும் போது வழுக்கி விழுந்துவிட்டான் என நவீனின் கை உடைந்த புகைப்படத்தையும் பத்திரிகைகளுக்கு அளித்தது.

 

 Minister's son is the attacker of the police?


இதே வேளையில், காவல்துறையிடமும், பொதுமக்களிடமும் மதுமயக்கத்தில் தகராறு செய்த நவீனின் வீடியோவினை சமூக வலைத்தளங்களில் பரவ செய்து " இவன் சசிகலா முதல்வராக்கும் முயற்சியின் போதும், ஓ.பி.எஸ்.தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த போதும் மித மிஞ்சிய உற்சாகப் பானத்தில் பத்திரிகைகளை அர்ச்சித்த அமைச்சரின் மகன்" என மறைமுகமாகவும், இன்னாரின் மகன் என நேரிடையாகவும் வைரலாக்கினர் சிலர். இது உண்மையா.? என நீலாங்கரை போலீசாரை கேள்வி மேல் கேட்டு நிம்மதியை குலைத்துக் கொண்டிருந்தனர் நெட்டிசன்கள். " இல்லையில்லை.! அமைச்சரின் மகன் என்றால் கையை உடைத்திருப்பார்களா.? இவன் வேறு.?" என அந்த வதந்திக்கு வக்காலத்து வாங்கி வந்தனர் சிலர்.

 

 Minister's son is the attacker of the police?

இவ்வேளையில், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகமோ, "என்னைக் குறிவைத்து தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க, அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே அமமுக பிரமுகர் மீது சென்னை மத்திய சைபர்கிரைம் போலீஸ் இருபிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்து வதந்திக்கு வாய்ப்பூட்டுப் போட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.