Skip to main content

"ஸ்டாலினின் போராட்ட அழைப்பு ஒரு அரசியல் நாடகம்!" - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

minister jayakumar pressmeet at chennai

 

அ.தி.மு.க அரசுடன் சேர்ந்து போராடத் தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: கருத்துத் தெரிவிப்பது கூட்டணிக் கட்சியினரின் உரிமை. ஆந்திர மாநிலத்தோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு பல்வேறு திட்டங்களில் முன்னோடியாக உள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது முதலமைச்சரின் முயற்சியால் தான். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரின் ஆளுநரைச் சந்தித்தோம்; ஆளுநர் நல்ல முடிவைத் தெரிவிப்பார் என நம்புகிறோம். இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கக் காலம் தேவைப்படும்.

 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து போராடத் தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்