Skip to main content

கலைஞர் உத்தரவுக்கு பணிந்த உடன்பிறப்பு! திமுகவின் கட்டுக்கோப்புக்கு ஓர் உதாரணம்!

Published on 07/03/2022 | Edited on 08/03/2022

 

ிபு

 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு சில பதவிகளைப் போட்டியிடப் பிரித்துக்கொடுத்து பட்டியல் வெளியிட்டார். 

 

ஆனால் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வென்றனர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று கலைஞர் சொல்லுவார். அந்தக் கட்டுப்பாட்டைச் சிலர் காற்றில் பறக்கப்பட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்துவிட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் திமுக தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன். தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளராக இருந்த சுரேஷ்ராஜன் அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஐயப்பன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 

இந்தநிலையில் 2004ம் வருடத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் உடன்பிறப்பு ஒருவர். 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். 2004ல் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தது. அப்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் 23 பேர் இடம் பெற்றிருந்தனர். இதுகுறித்த ஆலோசனையின்போது 23 பேரும் கடலூர் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த கணேசன் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 

 

இதுதொடர்பாக அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கணேசனை அழைத்துப் பேசினார். அப்போது கணேசன், ''நான் இதே பதவியில் (பஞ்சாயத்துத் தலைவர்) இருந்துட்டு போறேன். அந்த 23 பேர்ல யாரை வேண்டுமானாலும் நிப்பாட்டுங்க. நீங்க யாரை நிறுத்தினாலும் உழைக்கிறேன். திமுக வெற்றிக்கு பாடுபடுறேன்னு'' சொல்லியிருக்கிறார். 

 

அதற்கு கலைஞர், நீதான் போட்டியிடனும் எனச் சொல்ல, கணேசன் சற்று தயக்கத்துடன், எனக்கு இந்தப் பதவியே போதும்னே, வேற யாரையாவது நிக்க வையுங்க, நான் கடுமையா பாடுபடுவேன், கட்சிக்காக உழைப்பேனென்று சொல்ல, கலைஞரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி சொல்றேன்யா நீதான் வேட்பாளர், நீதான் நிக்கணும், அதனால பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ராஜினாமா செய் என்று சொல்கிறார்.

 

hjk

 

உடனே பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கணேசன், இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இடைத்தேர்தல் பணிகளைக் கவனிக்க மு.க.ஸ்டாலினை நியமிக்கிறார் கலைஞர். மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  வேட்புமனு தாக்கலுக்கு முன்பு, 23 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஏற்கனவே பஞ்சாயத்துத் தலைவர் பதவியிலிருக்கும் கணேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறதே எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன் என்றார் கலைஞர். 2004 இடைத்தேர்தலில் கணேசன் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

அந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற கணேசன் வேறுயாருமில்லை, தற்போது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று  தமிழக அமைச்சராக உள்ள சி.வி.கணேசன் தான் அவர்.

 

அப்போது கடலூர் மாவட்டத்தில் திமுக தலைமை சொல்வதைக் கேட்டு கட்டுக்கோப்பாக இருந்த உடன்பிறப்புக்கள், இப்போது உள்ளாட்சித் தேர்தலில் கோஷ்டியாகச் செயல்பட்டுள்ளது திமுக தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நமக்கு என்ன செய்தது என்பதைவிட, கட்சிக்காகக் கட்சியின் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்தோம் என்பதை இப்போதுள்ள உடன்பிறப்புகள் நினைக்க வேண்டும் என்கின்றார்கள் மூத்த உடன்பிறப்புக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்