Skip to main content

"கரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசு மீட்டு வருகிறது"- அண்ணாமலை பேட்டி... 

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

CORONAVIRUS ECONOMIC BJP LEADER ANNAMALAI


ஈரோடு மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இன்று (08/02/2021) செய்தியாளர்களைச் சந்திதார். 

 

அப்போது அவர் கூறியதாவது, "பாரதிய ஜனதா அரசு 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட். கரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசு மீட்டுவருகிறது. இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு ரூபாய் 63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 ஜவுளி பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இரண்டு ஜவுளி பூங்காக்கள் வர உள்ளது. அதில் ஒன்று ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டுவர முயற்சி செய்வோம். மருத்துவத்திற்கும் இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

கரோனாவுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள்  முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. அடுத்ததாக இரண்டு மருந்துகள் வர உள்ளது. இதற்காக மேலும் நிதி ஒதுக்கப்படும். சுயசார்பு இந்தியாவுக்காக, இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா அரசு கரோனாவை வெற்றிகரமாகக் கையாண்டது.

 

சிறையில் உள்ள 7 பேர் விடுதலையைப் பொறுத்தவரை, இது சாதாரண வழக்கு அல்ல. சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு மாநில ஆளுநர் வேகமாக முடிவு அறிவிக்கவேண்டும் என்று கூறியது. அதற்கு ஆளுநர் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆளுநர் காலதாமதம் செய்ததாகக் கூற முடியாது. அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தமிழர்கள் என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பார்க்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு கரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ரூபாய் 3 லட்சம் கோடி வழங்கியுள்ளது.

 

சசிகலா தமிழகம் வருகையால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு, நாங்கள் அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம். அவர் தண்டனை முடிந்து வருகிறார். அவர்கள் கட்சிக்குள் உள்ள குழப்பங்களை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கக் கூடாது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.