Skip to main content

வைகோ முன்னெடுத்த போராட்டம்; காப்பாற்றப்பட்ட யானைமலை; 13 ஆண்டுகளாகத் தொடரும் மாரத்தான்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

mdmk party conducted marathon in 14 years at madurai yanaimalai participated in durai vaiko

 

மதுரை மாவட்டம், யானைமலை பகுதியில் வருடந்தோறும் மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி, ‘சாதி மத எல்லைகளைக் கடந்து மனித நேயத்தால் ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளில் சமூக நல்லிணக்க மாரத்தான் போட்டியாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியை மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.

 

13 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழிப்புணர்வுக்காக மதிமுக சார்பில் தொடங்கப்பட்ட இந்த மாரத்தான் போட்டி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளில் நடைபெற்று வருகிறது. உலகில் பல்வேறு இடங்களில் ஒற்றைப் பாறையாலான மலைகள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவையில் ஒன்று மதுரை மாவட்டம் யானைமலை. இந்த யானைமலையில், எட்டாம் நூற்றாண்டில் மலையைக் குடைந்து கட்டப்பட்ட புகழ்பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. அதேபோல், ஒன்பதாம் நூற்றாண்டில் சமணர்கள்  இங்கு வந்ததற்கான ஆதாரங்களாக சமணப் படுகைகள் காணப்படுகின்றன. இப்படி இயற்கை மற்றும் வரலாற்று ரீதியாக பல்வேறு சிறப்பு பெற்ற இந்த யானைமலையை சிற்பக்கலை நகரமாக மாற்றுவதாக 13 வருடங்களுக்கு முன்பு அன்றைய அரசு அறிவித்தது.

 

அரசின் இந்த முடிவிற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையேற்று நடத்தினார். மேலும், சிற்பக்கலை நகரமாக யானைமலை அறிவிக்கப்பட்டால் அதன் விளைவு எவ்வாறாக இருக்கும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. வைகோவின் இப்படியான தொடர் போராட்டத்தை தொடர்ந்து அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியது.

 

mdmk party conducted marathon in 14 years at madurai yanaimalai participated in durai vaiko

 

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் யானைமலை மீட்பை நினைவுகூறும் வகையில் மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் தற்போது சமூக நல்லிணக்கம் சீர்குலைந்து வருவதை உணர்ந்து இந்த வருடம் நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு ‘சாதி மத எல்லைகளைக் கடந்து மனித நேயத்தால் ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளில் சமூக நல்லிணக்க மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

mdmk party conducted marathon in 14 years at madurai yanaimalai participated in durai vaiko

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய துரை வைகோ, “நண்பர்களை நாம் தேர்ந்தெடுக்கும் போது நல்லவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்களை சாதி, மத அடிப்படையில் தேர்ந்தெடுக்கக்கூடாது. உங்களுடைய முயற்சியை ஊக்குவிப்பவர்களாக உங்களுடைய நண்பர்கள் இருக்க வேண்டும்” என்றார். இந்த மாரத்தானில் ‘மனிதம் ஏற்போம்’ என்பதே முழக்கமாக இருந்தது. இந்த மாரத்தான் போட்டி மதுரை மாவட்ட கிழக்கு ஒன்றிய மதிமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.