Skip to main content

பாலியல் தொல்லை... மான்கராத்தே திரைப்பட நடிகை போலீசில் புகார்!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

 

சின்னத்திரையிலும், சினிமாவிலும் சிறு வேடங்களில் நடித்து வந்தவர் சமிக்சா. மான்கராத்தே படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டு குழந்தைகளுடன் சென்னை கிழக்கு முகபேரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சொந்தமாகவும் செனாய் நகரில் அழகு நிலையம் நடத்திவருகிறார். 

 

 police

 



இந்த நிலையில் சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் அவர் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று எனது இரண்டு ஆண் பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் எனக்கு பல வகையிலும் பிரச்சனை ஏற்பட்டது. 
 

பெண்கள் அழகு நிலையம், யோகா பயிற்சி கலையை வைத்து சொந்தமாக கிளினிக் நடத்தி வந்தேன். சின்னத்திரை மற்றும் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடத்து வந்தேன். இப்படிப்பட்ட நேரத்தில் சரவணன் சுப்பிரமணி என்பவர் என்னிடம் அறிமுகமாகி பழகினார். என்னை திருமணம் செய்தாக கூறினார். கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டோம். 

 


 

2015ம் ஆண்டு கருவுற்றேன். உடனே சரவணன் எனக்கு அபார்ஷன் செய்துவிட்டார். தொடர்ந்து ஆறு முறை கருவுற்றும் என்னை அடித்து துன்புறுத்தி அபார்ஷன் செய்துவிட்டார். அதன் பிறகு பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். 2016ல்தான் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. இதுபற்றி கேட்கும்போது, முதல் மனைவிக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னார். ஆனால் நாளடைவில் இதுபற்றி விசாரிக்கும்போது அவர் தனது முதல் மனைவியை பிரியவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் எனது பிள்ளைகளோட தனியாக வசிக்க வந்துவிட்டேன். 
 

தொடர்ந்து எங்கு சென்றாலும் என்னை தொடர்ந்து வந்து என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று அடியாட்கள் மூலமாக தொடர்ந்து என்னையும் எனது மகன்களையும் மிரட்டி வருகிறார். பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதுவரை ஆறு முறை நான்  என் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். சரவணன் சுப்பிரமணியும், அவரது முதல் மனைவியும் பல பெண்களை இப்படி ஏமாற்றியுள்ளார் என்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சமிக்சா. இது தொடர்பான விசாரணையை  இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரித்து வருகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.