Skip to main content

மக்காச்சோள விதையால் விவசாயிகளுக்கு நஷ்டம்... கலெக்டரிடம் மனு கொடுத்த திமுக எம்.எல்.ஏ!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து தொகுதி மக்களுக்காக கோரிக்கை மனுவை கொடுத்தார். 


இந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 'கஜா' புயலால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நஷ்டப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்த மழை காலத்திலாவது விவசாயம் செய்து தங்கள் நஷ்டத்தை சரிசெய்து கொள்ளலாம் என ஆறுதலோடு இருந்தனர். இந்நிலையில் விவசாய வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலமாக 46 டன் ஊ.P.848இ ஊ.P.868 என்ற ரக மக்காச்சோள விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.  


தற்போது மழை பெய்துள்ளதால் மக்காச்சோள விதைகளை பெற்ற விவசாயிகள் அதனை நடவு செய்தனர். ஆனால் அவ்விதைகள் நடவு செய்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் முளைக்கவில்லை. அவ்விதைகள் விதைப்புக்கு ஏற்றாற் போல் தரமான விதைகள் அல்ல. ஒவ்வொரு விவசாயிகளும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்திற்கு செலவு செய்து, இந்த முளைப்பு திறன் இல்லாத இந்த ஊ.P.848இ ஊ.P.868 என்ற ரக மக்காச்சோள விதைகளை நடவு செய்து மேலும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். 


இவ்விதைகளை பயிர் செய்து மற்ற சாகுபடிக்கு செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, முளைப்புத்திறன் இல்லாத ஊ.P.848இ ஊ.P.868 என்ற ரக மக்காச்சோள விதைகளை தயாரித்த சம்மந்தப்பட்ட நிறுவனத்தை அரசு தடை செய்து, அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும், முளைப்பு திறன் இல்லாத இந்த மக்காச்சோள விதைகளை பயிர்செய்து நஷ்டப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்கும் படியும்.

 Loss of maize seed to farmers  DMK MLA appeals to Collector


2016- 2017 ஆம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 'பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில்' பணம் செலுத்தியும் இதுவரை அந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வேடசந்தூர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 109 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் 2008-ஆம் ஆண்டு அரசப்பபிள்ளைபட்டி முதல் சத்திரப்பட்டி வரை ஏற்கனவே போடப்பட்ட குடிநீர் குழாய்கள் மிகவும் சேதமடைந்து விட்டது. 


சேதமடைந்த குடிநீர் குழாய்களை மாற்றித்தருவதற்கு ரூ.40.00 லட்சம் செலவாகும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த சேதமடைந்த குடிநீர் குழாய்களை மாற்றித்தருவதற்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்தோ அல்லது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவோ நிதி ஒதுக்கி குடிநீர் பிரச்சனையை தீர்க்க உதவும் படியும், 101 குடியிருப்புகளுக்கான கள்ளிமந்தையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்தேக்கத் தொட்டி மட்டுமே உள்ளது. 

இந்த நீர்தேக்கத் தொட்டி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை. எனவே 3.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள புதிய நீர்தேக்கத் தொட்டி அமைத்துக் கொடுத்தால் மேற்கண்ட 101 குடியிருப்புகளுக்கு குடிநீர் தடையின்றி வழங்க முடியும். எனவே 101 குடியிருப்புகளுக்கான கள்ளிமந்தையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 3.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு நிதி ஒதுக்கும்படியும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழனி (4 ஊராட்சிகள்) ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் நியாயவிலைக்கட்டிடங்கள் ஆகியவற்றை அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, புதிய நியாயவிலைக்கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்றும், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம் தற்போது செயல்படுவதில்லை. ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி அலுவலகத்தில்  மட்டுமே தற்போது ஆதார் சேவை மையம் செயல்படுவதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. 


எனவே ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை மையத்தை மீண்டும் செயல்பட தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. சக்கரபாணியிடம் உறுதி கூறியும் இருக்கிறார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.