Skip to main content

ஜூன் 14- ஆம் தேதி வரை உணவு பொட்டலங்கள் வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவு!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

lockdown extended free foods minister order

ஜூன் 14- ஆம் தேதி வரை அறநிலையத்துறைச் சார்பில் உணவு பொட்டலங்களைத் தொடர்ந்து வழங்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினைப் போக்கும் விதமாகவும், அரசு மருத்துவமனைகளில் கரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12/05/2021 அன்று முதல் 05/06/2021 வரை நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு ஏற்கனவே ஆணையிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு காலம் மேலும் 14/06/2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் உணவுப் பொட்டலங்களை நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு தொடர்ந்து வழங்கிடவும், இதனால் தேவைப்படும் கூடுதல் நிதியினை இந்து சமய அறநிலையத்துறையில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து தேவைப்படும் திருக்கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்