Skip to main content

மனைவியைக் கொடுமைப்படுத்தியவருக்கு ஆயுள் தண்டனை...

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Life sentence prisonment for man who treated his wife worstly ...

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார், வயது 32. இவருடைய மனைவி மஞ்சுளா, வயது 27. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்.

 

இருவரும் 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். பிறகு மஞ்சுளாவை அவரது தாய் வீட்டில் தங்க வைத்துவிட்டு, ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இரண்டு முறை கர்ப்பமான மஞ்சுளாவுக்கு மாத்திரை வாங்கிக் கொடுத்து கருவைக் கலைக்கச் செய்துள்ளார் ராஜேஷ்குமார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு மஞ்சுளாவுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை ராஜேஷ்குமார் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

 

இதை அறிந்த மஞ்சுளா, கணவர் ராஜேஷ் குமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சினையின்போது மஞ்சுளாவை அவரது கணவர் ராஜேஷ் குமார் ஜாதி பெயரைக் கூறி திட்டி தாக்கியதாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் மஞ்சுளா.

 

இதையடுத்து மகளிர் போலீசார், மஞ்சுளா கொடுத்தப் புகாரின் பேரில் விசாரணை செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் எஸ்சி எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில், மஞ்சுளாவின் கணவர்  ராஜேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (31.01.2021) தீர்ப்பளித்துள்ளார். ராஜேஷ்குமார், மஞ்சுளாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளார். மனைவியை அடித்து துன்புறுத்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.