Skip to main content

ஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிப்போம்-கலைஞர் சிலை திறப்பு விழாவில் ராகுல்!!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018
RAHUL

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வெண்கல திருவுருவச் சிலையை திறந்து வைத்த பிறகு மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல முக்கிய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். அந்த மலரஞ்சலி நிகழ்விற்குப் பிறகு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தி பேசிய ராகுல் காந்தி    

 

நான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் உங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மதிக்கிறேன். ஆனால் மோடி அரசு மக்களின் குரலை நெரிக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து அடுத்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறினார்.  

 

சார்ந்த செய்திகள்