Skip to main content

கோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
Cyan Manoj is the culprit for the search

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆஜரான 5 பேரும் மார்ச் 4ம் தேதி மீண்டும் ஆஜராக  உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

முன்னதாக இன்று காலை ஜம்சீர் அலி, சதீஷ், உதயன், சந்தோஷ் சாமி, ஜித்தன் ஜாய் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.இன்று ஆஜராகாதா மனோஜ் சாமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம். 

 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். ஜாமீன் ரத்தான நிலையில் இருவரையும் கைது செய்ய ஏற்கனவே உதகை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் சயான் மற்றும் மனோஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்