Skip to main content

பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்திய காவல்துறையினர்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

ஓஎன்ஜிசி விவகாரத்தால் தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வந்த கதிராமங்கலம் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழாவையொட்டி, அங்குள்ள பள்ளியிலும், கடைவீதியிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம்,என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் பார்வையை இழுத்திருக்கிறார்கள் பந்தநல்லூர் காவல்துறையினர்.
 

தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி காவல் நிலையம் பந்தநல்லூர். அந்தக் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமமே கதிராமங்கலம். இரண்டு வருடங்களாக ஓ.என்.ஜி.சி குழாய் பதிப்பினால் வழக்கு, கைது, போராட்டம் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அப்பகுதி மக்களுக்கும் காவல்துறைக்கும் ஒருவித கருத்து முரண்பாடு இருந்தது.

KATHIRAMANGALAM VILLAGE SCHOOLS FORMER PRESIDENT ABDUL KALAM BIRTHDAY CELEBRATION

இந்தநிலையில் சமீபத்தில் தமிழகத்தை உலுக்கி வரும் டெங்குகாய்ச்சல் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், பல இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகளையும் பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா உள்ளிட்ட காவலர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி கிராமமான மொழையூர் அரசு பள்ளியிலும், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தனர். அதனை தொடரந்து கதிராமங்கலம் கடைவீதியில் தலைக்கவசம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள், அங்குள்ள அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்துல்கலாம் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், தலைக்கவசத்தின் அவசியம், போஸ்கோ சட்டம் உள்ளிட்டவற்றை பற்றி விளக்கி பேசினர்.
 

KATHIRAMANGALAM VILLAGE SCHOOLS FORMER PRESIDENT ABDUL KALAM BIRTHDAY CELEBRATION



விழாவில் பேசிய இன்ஸ்பெக்டர் சுகுணாவோ, "ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நமது அய்யா மறைந்த அப்துல்கலாமை போல சாதனையாளர்களாக வர வேண்டும், கனவு காணுங்க, நீங்கள் ஒவ்வொரு வரும் ஒரு அப்துல்கலாம் தான்" என்று பேசியவர் டெங்கு காய்சலை ஒழிக்க அரசு நினைத்தால் மட்டும் ஒழித்து விட முடியாது, மாணவர்களாகிய நீங்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் நினைத்து சுகாதாரத்தை பேனிக்காக்கவேண்டும். தலைக்கவசம் நமது உயிருக்கான கவசம். அதோடு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒருமரம் கட்டாயம் வளர்க்க வேண்டும். மரம்தான் இயற்கையை சமநிலையில் வைத்திருக்கும்" என்று பேசிமுடித்தார். அதன் பிறகு அந்த பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளோடு மரக்கன்றுகளை நட்டதோடு, அனைவருக்கும் மரக்கன்றுகளையும் வழங்கி மகிழ்வித்தனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.