Skip to main content

நீங்க கட்சி வேட்பாளரா ? டி.எஸ்.பி.யா? பாலியல் வழக்கில் கிழித்து தொங்க விட்ட நீதிபதி ! 

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

 

கரூர் மாநகர டி.எஸ்.பி கும்மராஜாவை, கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் நீங்க வேட்பாளரா ? டி.எஸ்.பி.யா ? பாலியல் வழக்கில் கிழித்து தொங்க விட்ட சம்பவம் போலிஸ் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பொருளியல் துறைக்குத் தலைவராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன். `52 வயதான இவர் மாணவிகளிடம் தவறாகப் பேசுகிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தனர். விசாரிக்க சொல்லி எஸ்.பி. உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தக்கொண்டே வந்தால் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆரம்ப முதலே இந்த வழக்கில் போலிசார் சுணக்கமாகவே இருந்தனர். மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகே அவர் மீது பாலியல்வழக்கு, தீண்டாமை வழக்குகள் பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அப்போதே மாணவர்கள், "காவல்துறை இளங்கோவனுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது" என்று குற்றம்சாட்டினர். இருந்தாலும், கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

karur govt arts and science college womens issue sp police court

 

 

கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இளங்கோவன் தரப்பில் ஜாமீன் கரூர் நீதிமன்றத்தில் 4 முறை தாக்கல் பண்ணியும் தள்ளுபடி செய்தார் அதன் பிறகு உயர்நீதிமன்றத்தில் 4 முறை ஜாமீன் தாக்கல் பண்ணியும் தள்ளுபடி செய்தனர். அதன் பிறகு கரூர் காவல்துறையினர் 90 நாட்கள் கடந்தால் மீண்டும் 9- வது முறையாக ஜாமீன் தாக்கல் செய்தார். விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கும்பராஜா கரூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. என்பதால் இந்த முறை கட்டாயம் தனக்கு ஜாமீன் கிடைக்கும் என்று பேராசிரியர் இளங்கோவன் எதிர்பார்த்து இருந்த நிலையில், அந்த ஜாமீன் மனுவைப் பார்த்துக் கோபப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், நேரடியாக அரசு வழக்கறிஞரிடம் என்ன சார் இது.. இதுவரைக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணல என்று கேட்க, உடனே அரசு வழக்கறிஞர் சார்.. வழக்குக்கா தான் ஆஜர் ஆகிறேன் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. கும்பராஜா கிட்ட தான் கேக்கணும் என்று மாற்றி விட டென்ஷன் ஆனா நீதிபதி வழக்கின் விசாரணை அதிகாரியான கரூர் நகர டி.எஸ்.பி கும்பராஜாவை ஆஜராகச் சொல்லி 11.45க்கு உத்தரவிட்டார். 

 

 

 

karur govt arts and science college womens issue sp police court

 

 

 

என்னவோ ஏதோ என்று அவசர அவசரமாக ஆஜர் ஆனா கும்பராஜாவை 1 மணிநேரம் காத்திருப்புக்கு பின்பு விசாரணை அழைத்த நீதிபதி நீதிமன்றத்தில் நடந்தவற்றை விவரித்த வழக்கறிர்கள் நம்மிடம் ``நீதிமன்றத்துக்கு கும்மராஜா வந்ததும், குற்றவாளியைக் கைது செய்து 90 நாள்கள் ஆகியும், ஏன் அவர் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி தொடர்ந்து, உடனே டி.எஸ்.பி. அரவக்குறிச்சி தேர்தல் நடந்தது என்று சொல்ல உடனே கடுப்பான நீதிபதி நீங்க கட்சி வேட்பாளரா? டி.எஸ்.பி.யா ? என்று கேட்க உடனே அவசரஅவசரமாக கும்பராஜா சார் நான் டி.எஸ்.பி. என்று சொல்ல உடனே இடம் மறிந்த நீதிபதி நா என்ன கேக்கறேன் நீங்க என்ன சொல்றீங்க, இவ்வளவு நாளா ? ஏன் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் என்று கேட்டால் நீ என்ன பதில் சொல்றீங்க குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், அவருக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடும் அதற்கு நீங்களே வழிவகுக்கிறீர்களா? அப்போ நான் உங்கள் விசாரணையில் சந்தேகம் இருக்கிறது. நீங்கள் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்று எழுதி வைத்து ஜாமீன் கொடுத்தால் உங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய் விடும்.

 

 

 

karur govt arts and science college womens issue sp police court

 

 

உங்களை எல்லாம் யார் போலீஸ் வேலைக்கு எடுத்தது? நீங்களெல்லாம் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்? நீங்கள் குற்றவாளியை தப்பிக்க வைக்கக் காரணமாக இருந்திருக்கிறீர்கள்? உங்களை மாதிரி ஆள்கள் காவல்துறையில் இருந்தால் பொதுமக்களுக்குத்தான் கேடு. கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் என்ன கஷ்டம்? இப்படிப்பட்ட வழக்கில் இவ்வளவு அலட்சியமாக 90 நாள்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் பண்ணாம, அப்படி என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க? எனக்குக் காரணம் சொல்லணும். இளங்கோவனுக்கு இன்று ஜாமீன் தரமுடியாது. நீங்க 90 நாள்களும் என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு தினவாரியான அபிடவிட்டை கோர்ட்டில் தாக்கல் பண்ணுங்க. திங்கட்கிழமை தாக்கல் பண்ணணும். அன்னைக்கு இந்த மனுமீதான விசாரணையைத் தள்ளி வைக்கிறேன்' எனக்கும் பெண் பிள்ளைங்க இருக்காங்க, அதான் இவ்வளவு ஆதங்கப்படுகிறேன். போய் வேலைய பாருங்க என்று கடுப்படுத்து அனுப்பினார்.

 

 

இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெகதீஷன், புகழேந்தி, முருகானந்தம், தமிழ்ராஜேந்திரன் ஆகியோர் ஆஜர் வழக்காடி வருகிறார்கள். இந்த வழக்கு குறித்து அவர்களிடம் நாம் பேசுகையில் பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவிக்கே நீண்டநாட்கள் கழித்து தான் கிடைத்தது. இந்த வழக்கில் மாணவிகளிடம் தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதை விசாரிக்காமல் இழுத்தடித்துக்கொண்டே இருக்கிறார். சிறையில் வைத்தே வழக்கு விசாரணையை நடத்தலாம் என்று தொடர்ச்சியாக நாங்க வழியுறுத்தி வருகிறோம் என்றார்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.