Skip to main content

சொத்துக்குவிப்பு; முன்னாள் அமைச்சர் காமராஜ் மகன்கள் மீதும் வழக்குப் பதிவு! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Investment; A case has been registered against the sons of former minister Kamaraj!

 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

 

சசிகலா தம்பி திவாகரனுடன் சாதாரணமாக இருந்தவருக்கு திவாகரன் கட்சி பதவி மற்றும் எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுத்ததுடன், ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியும் பெற்றுக் கொடுத்தார். ‘எனக்கு இந்த பதவி கிடைக்க அண்ணன் திவாகரன் தான் காரணம்’ என்று ஒரு பொதுக்கூட்டத்திலேயே நன்றி கூறினார். சாதாரணமாக இருந்தவர் அமைச்சரானதும் படிப்படியாக தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்தார். உணவுத்துறை அமைச்சரானதும் வெளி மாநிலங்களில் நவீன பருப்பு மில் தொடங்கியதாகவும் அப்போது கூறப்பட்டது. 

 

Investment; A case has been registered against the sons of former minister Kamaraj!

 

அதே போல, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இவரது துறையில் கிருஷ்டி நிறுவனத்தில் பருப்பு கொள்முதல் செய்ததில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அப்போதைய எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். அதற்கான விசாரணையும் நடந்தது. அடுத்து வந்த தேர்தலில் இந்த பருப்பு ஊழல் பற்றி விசாரிக்கப்படும் என்று தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

இந்த நிலையில், தற்போது அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ, அவரது மகன்கள் டாக்டர் இனியன், இன்பன், உறவினர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் ரூ.58.44 கோடிக்கு சொத்துகள் சேர்த்ததாக திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

Investment; A case has been registered against the sons of former minister Kamaraj!

 

இந்த வழக்குப் பதிவின் அடிப்படையில் இன்று அதிகாலை முதல் மன்னார்குடியில் காமராஜ் வீடு மற்றும் அலுவலகம், அவரது உறவினர்களான குமார், பி.என் பாஸ்கர், பைங்காநாடு ராதா வீடு, கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி வீடுகள்  நன்னிலம் வீடுகள் உள்பட 10 இடங்களிலும் மற்றும் தஞ்சை பூக்காரத் தெருவில் காமராஜ் சம்மந்தி டாக்டர் மோகன் வீடு மற்றும் காமராஜ் மகன் மருமகளுக்காக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனை உள்பட 5 இடங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


அதிகாலை முதல் சோதனை தொடங்கியுள்ள நிலையில், மன்னார்குடியில் ஆர்.காமராஜ் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கானோர் திரண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.