Skip to main content

நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு...

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

Increase in the time of ration shops ...

 

தமிழ்நாட்டில் முதற்கட்ட ஊரடங்கின்போது நியாயவிலைக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. 2வது கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது காலை 9 மணிமுதல் 12.30 மணிவரை மட்டுமே நியாயவிலைக் கடைகள் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

 

இந்நிலையில், நேற்றுமுதல் (07.06.2021) புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நியாயவிலைக் கடைகளின் நேரத்தையும் அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காலை 9 மணிமுதல் மதியம் 12.30 மணிவரையும், மீண்டும் மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரையும் நியாயவிலைக் கடைகள் செயல்படலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்