Skip to main content

மகனின் காதலியை பாலியல் வன்கொடுமை செய்து தாலிகட்டிய தந்தை; வேதாரண்யம் அவலம்!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

சொந்தமகன் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறிய தந்தையே அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாலி கட்டி குடும்பம் நடத்த வரவேண்டுமென அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ்கண்ணன் (வயது 20). அவரது தந்தை கருப்பு நித்தியானந்தம் (வயது 45). முகேஷ் கண்ணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நாலுவேதபதி சேர்ந்த இளம்பெண் ஒருவரோடு நெருக்கம் ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மாறி, அந்தக் காதல் கல்லூரியை கடந்து படிப்பு முடிந்து சென்னையில் வேலை பார்க்கும் இடம் வரை தொடர்ந்தது.

 

INCIDENT IN NAGAI;POLICE INVESTIGATION


இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து சொந்த ஊருக்கு வந்தனர். இருவரும் அவரவர் வீட்டில் தங்களது காதலை எடுத்துக் கூறியுள்ளனர். முகேஷ் கண்ணனின் வீட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால் அந்த இளம் பெண்ணின் வீட்டிலோ இடியும், மின்னலும், புயலுமாக எதிர்ப்பு வீசியது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண்ணை வீட்டில் அடைத்துவைத்திருந்தனர்.

முகேஷ் கண்ணனோ எனக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கலன்னா, உசுரோட இருக்கமாட்டேன் என வைராக்கியமாகவே இருந்தார். அதனால் அவரது தந்தை கருப்புநித்தியானந்தம் அந்தப் பெண்ணை தேடி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது பெற்றோர்கள் வெளியே அனுப்பாமல் அடைத்து வைத்திருந்த தெரிந்து கொண்டவர், " நான் முகேஷ் கண்ணனின் அப்பா உங்கள் இருவரையும் சேர்த்து வைத்து திருமணம் செய்து வைப்பது என்னுடைய பொறுப்பு, நம்பிக்கை இருந்தால் என்னோடு வா, என்று கூற மிகவும் ஆர்வத்தோடும், சந்தோஷத்தோடும், நம்பிக்கையோடும் காதலனின் தந்தைதானே என அந்த இளம்பெண் அவரோடு சென்றிருக்கிறார்.

 

INCIDENT IN NAGAI;POLICE INVESTIGATION


அந்த இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு போகிற வழியில் சபல சாமியார் நித்யானந்தாவைப்போல கருப்பு நித்தியானந்தத்திற்கும் இச்சை மூண்டது, விபரீத ஆசையோடு அழைத்துவந்த நித்தியானந்தம் போகிற வழியில் ஒரு இடத்தைத்தேடி அந்தப்பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தாலியும் கட்டி, அவரிக்காடு கிராமத்தில் உள்ள அவரது நண்பன் சக்திவேலின் வீட்டுக்கு அழைத்து சென்று, இனி என்னுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் உன்னை தீர்த்துக்கட்டி விடுவேன், என மிரட்டி அடைத்து வைத்துவிட்டு. தனது மகனிடம் அந்தப் பெண் வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டாள் என நடித்திருக்கிறார்.

இதற்கிடையில் அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து நமது வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டதே என அழுதுகொண்டே வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசிடம் கூறியிருக்கிறார். இளம்பெண் கூறியதை கேட்டு போலீசாரை அதிர்ந்துபோனார்கள். அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து, பாலியல் பலாத்காரம் செய்த கருப்பு நித்யானந்தம், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி அம்சரவல்லி ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

உலகையே உலுக்கிய சபலசாமியார் நித்யானந்தா தான் இப்படி என்றால் அந்த பெயரை வைத்திருப்பவர்கள் அனைவருமே இப்படியா என்பதே அங்குள்ளவர்களின் பேச்சாக இருக்கிறது.

நித்தியானந்தத்திற்கு வேண்டபட்ட ஒருவரோ,"இருவரும் காதலிப்பது இருவரது வீட்டிற்குமே பிடிக்கல, ஆனால் அந்த பெண்வீட்டில் எதிர்ப்பு பகிரங்கமாக வெளிபட்டது, கருப்பு நித்தியானந்தம் சற்று வேறுமாதிரி எதிர்ப்பை காட்டியிருக்கார், அதை இப்படி இட்டுக்கட்டி ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க," என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.