Skip to main content

வீடு முழுக்க ரத்தம்... பதறவைத்த கஞ்சா இளைஞனின் வெறிச்செயல்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

incident in kanjipuram

 

கஞ்சா போதையில் இளைஞன் ஒருவன் 70 வயது மூதாட்டி ஒருவரையும் அவரின் 5 வயது பேரனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பட்டுநூல்சத்திரம் என்ற கிராமத்தில் வசித்துவரும் யுவராஜ் என்ற இளைஞன் கஞ்சா போதைக்கு அடிமையானவன் என்று கூறப்படுகிறது. அடிக்கடி கஞ்சா புகைத்துவிட்டு தலைகால் நிற்காத போதையில் அந்த பகுதியில் வருவோர் போவோரிடம் சண்டை இழுப்பது மட்டுமல்லால் போதையில் கண்முடித்தனமாக தாக்கும் பழக்கமும் அவனுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கஞ்சா புகைத்துவிட்டு வீட்டுக்கு வந்த யுவராஜ் பக்கத்துவீட்டு வாசலில் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டிருந்த 70 வயது மூதாட்டி ஒருவரை தரதரவென இழுத்துச் சென்று வீட்டில் இருந்த அரிவாளால் கொடூரமாகத் தங்கியுள்ளான். பாட்டியின் சத்தத்தைக் கேட்ட மூதாட்டியின் 5 வயது பேரன் வீட்டிற்குள் ஓடி வர, சிறுவனையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளான். பின்னர் இருவரையும் உள்ளே வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு யுவராஜ் சென்றுவிட்டான். மூதாட்டி மற்றும் சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்க்கையில் வீடு முழுவதும் ரத்தம் தெறித்துக் கிடந்தது. உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவத்தில் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா போதை இளைஞன் யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்