Skip to main content

நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்த சோகம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட மணப்பெண்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

incident in cuddalore

 

கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது அண்ணன் மகள் 25 வயது செல்வி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பொறியியல் பட்டம் படித்துள்ளார். செல்வியின் தந்தை ராஜேந்திரன், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன நிலையில், தனது சித்தப்பா ராமலிங்கம் பாதுகாப்பில் வளர்ந்து கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் படித்துள்ளார்.

 

இந்நிலையில், செல்வி பொறியியல் பட்டம் படித்த கல்லூரியில், சங்கேஷ் என்ற மாணவனும் படித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்தக் காதல் விவகாரம் இருதரப்பு வீட்டாருக்கும் தெரியவர, இரு குடும்பத்தினரும் சந்தித்துப் பேசி அவர்கள் சம்மதத்துடன் காதலர்கள், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், காதல் மணமகன் சங்கேஷின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். ஆனால், எவ்வளவோ முயன்றும் சிகிச்சை பலனின்றி சங்கேஷ் இறந்து போய்விட்டார். 

 

தான் காதலித்த காதலனே தனக்குக் கணவனாக வரப்போகிறார் என்ற சந்தோஷத்தில் இருந்த செல்விக்கு, சங்கேஷ் மரணம் பேரிடியாக விழுந்தது. இதனால், மனமுடைந்த செல்வி, சில நாட்களில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் விஷம் குடித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி செல்வியும் இறந்து போய்விட்டார். இதுகுறித்து, கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காதலித்த காதலர்கள் கணவன் மனைவியாக ஆகப்போகும் நேரத்தில் மணமகள், மணமகன் இருவரும் இறந்துபோன சம்பவம், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.