Skip to main content

காதல் கணவனின் கொடுஞ்சொல்! குழந்தைக்கே எமனான தாய்!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

பள்ளியில் படிக்கும்போதே காதலித்தார்கள்; எல்லைமீறிப் பழகினார்கள். அதனால், அவள் கர்ப்பமானாள். வயிறு வீங்கியதைக் கவனித்த பள்ளி ஆசிரியர்கள். தந்தையை வரவழைத்து ‘இந்த ஒழுங்கீனத்தை அனுமதிக்க முடியாது..’ என்று மாற்றுச் சான்றிழைக் கையில் திணித்து வீட்டுக்கு அனுப்பியது பள்ளி. இதற்கு காரணமானவரே தாலி கட்ட வேண்டும் என்பதில் அவள் பிடிவாதமாக இருந்து, காதலித்தவனையே கரம் பற்றினாள்.

 

incident in aruppukottai... police investigation


காதல் அரும்பி ‘குடும்பம்’ நடத்திய வயதைச் சட்டம் அனுமதிக்காதுதான். ஆனாலும், குழந்தை பெற்று திருமணம்தான் சுமுகமாக நடந்துவிட்டதே! காதல் வாழ்க்கையை இனிக்க இனிக்க வாழ வேண்டியதுதானே! அதுதான் நடக்கவில்லை. ‘குழந்தைக்கு நான் அப்பா இல்லை’ என்று சந்தேகத் தீயைக் கொளுத்திப் போட்டான், கணவன். எந்நேரமும் சண்டை போட்டால் வாழ்க்கை நரகம்தானே! அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் தொடங்கி, மதுரை சரக டி.ஐ.ஜி. வரைக்கும் விவகாரம் சென்று, விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் மூலம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சமரசம் செய்து வைத்தும், பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கணவனும் மனைவியும் ரத்த சொந்தங்களுடன் ஆலோசித்து ஒரு முடிவெடுத்தார்கள். அந்த படுபாதகச் செயல், கணவன் அமல்ராஜ், மனைவி மோகனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) , கணவனின் பெற்றோர் மரிய லூகாஸ் – விமலா, மோகனாவின் தந்தை சூசை மாணிக்கம் என 5 பேரை கம்பி எண்ண வைத்திருக்கிறது.

கருவை 10 மாதங்கள் வயிற்றில் சுமந்து பிரசவித்து, 11 மாதங்கள் வரை வளர்த்த மகன் விகாஸை, தந்தை அமல்ராஜ் வற்புறுத்தியதால், வாளித் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலையே செய்துவிட்டாள் மோகனா. இனியொரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம் என்ற சுயநலத்தால்தான்,  பெற்றோராலேயே குழந்தை விகாஸ் கொல்லப்பட்டிருக்கிறான்.  மோகனாவின் தந்தை சூசை மாணிக்கத்துக்கும், அமல்ராஜுவின் பெற்றோருக்கும் தெரிந்தே கொலை நடந்திருக்கிறது. . குழந்தை தவறி தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டது என்று அமல்ராஜுவும் மோகனாவும் நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் அம்பலமானது. சம்பந்தப்பட்ட ஐவருமே கைதாகியுள்ளனர்.

‘பள்ளியில் படிக்கும்போதே காதலித்தவளாயிற்றே! உனக்கு நான் மட்டுமா காதலன்? நீ கர்ப்பமானதற்கு நானா காரணம்?’ என்றெல்லாம் வார்த்தைகளால் அமல்ராஜ் தினமும் வறுத்தெடுத்ததால், குழந்தை விகாஸ் மீது வெறுப்பு ஏற்பட்டு, கொலை செய்யவும் சம்மதித்திருக்கிறாள், மோகனா. 

குழந்தைக்கு அம்மாதானே உலகம்! அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்கிறார்களே! உண்மைக் காதல் இல்லையென்பதால், ஒரு தாயின் மகத்துவத்தை, மோகனா  உணர்ந்திருக்கவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.