Skip to main content

திருமணம் மீறிய உறவு; கணவன் கொடூரக் கொலை; மனைவியுடன் இளைஞர் கைது

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

improper liaison; Youth arrested with wife

 

திருமணம் மீறிய உறவின் காரணமாக மனைவியே கட்டிய கணவனைக் கொன்றிருப்பது தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி நகரையே பதைபதைக்க வைத்திருக்கிறது.

 

ஆளரவமற்ற புளியங்குடி நகரின் நவாப் சாலை அன்றைக்குப் பரபரப்பாக காணப்பட்டது. மக்களின் கூட்டம் அரக்கப்பறக்க திரண்டிருந்தது. காரணம், சாலையின் ஓரமாக நடுத்தர வயதுடைய ஒருவர் தலை, கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த தகவல் புளியங்குடி காவல் நிலையம் வரை போக, புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி விசாரணையை மேற்கொண்டனர்.

 

உயிரிழந்து கிடந்தவர் அருகிலுள்ள வாசுதேவநல்லூரிலிருக்கும் ஒரு ஹோட்டல் ஒன்றில் வடை மாஸ்டராக பணியிலிருக்கும் மாரியப்பன் என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை தன் மனைவி கனகாவிடம் இரு சக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் போட்டுவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற மாரியப்பன் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாரியப்பன் கனகா தம்பதியரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருகிற உறவினரான திருமணமாகாத விக்னேஷ் என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் கஷ்டடிக்குக் கொண்டு வந்து விசாரித்த போலீசாரிடம்,  நடந்தவற்றை விவரித்திருக்கிறார் விக்னேஷ்.

 

மாரியப்பன் கனகா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் கேரளாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்திருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் வாசுதேவநல்லூருக்கு வந்திருக்கிறார்கள். மனநலம் சார்ந்த பிரச்சனையில் இருந்த மாரியப்பன், மனநோய் தாக்கம் குறித்து சிகிச்சையும் மேற்கொண்டிருக்கிறார்.

 

improper liaison; Youth arrested with wife

 

இந்த சூழலில்தான், வாலிபர் விக்னேஷுக்கு மாரியப்பனின் மனைவி கனகாவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. இது உறவினர்கள் மூலம் கணவர் மாரியப்பனுக்குத் தெரிய வந்திருக்கிறது.

 

இதனால் ஆத்திரமான மாரியப்பன், மனைவி மற்றும் விக்னேஷையும் கண்டித்துள்ளார். தான் கடனாக விக்னேசுக்குக் கொடுத்த 6 லட்சத்தைத் திரும்பிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், தனது தொடர்புக்கு தடையாக இருக்கிற மாரியப்பனைக் கொலை செய்கிற கொடூர முடிவுக்கு வந்திருக்கிறார். மனைவி கனகாவும் அவனது திட்டத்திற்கு ஒத்துப் போயிருக்கிறார்.

 

இவர்களின் கொடூர திட்டத்திற்கு வாய்ப்பாக அக்.13 அன்று விடிவதற்கு சற்று முன்னதாக வீட்டை விட்டுப் புறப்பட்ட மாரியப்பன், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். உடனே தகவலைத் தனது செல்போன் மூலம் விக்னேஷிடம் தெரிவித்திருக்கிறார் கனகா. சற்றும் தாமதிக்காமல் விக்னேஷ் மாரியப்பனைத் தொடர்பு கொண்டு புளியங்குடியிலுள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துத் தருகிறேன். தனக்கு பணம் கிடைத்திருக்கிறது. தனக்கு கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு செல்போன் மூலம் சொல்லியிருக்கிறார்.

 

இதனை நம்பிய மாரியப்பன் பைக்கில் செல்ல, அவரைப் பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் சென்ற பால் வியாபாரி விக்னேஷ், புளியங்குடியின் ஆளரவமற்ற நவாப் சாலையில் செல்கிறபோது மாரியப்பன் பைக் மீது மோத அவரது பைக் துண்டாகப் போய் விழுந்திருக்கிறது. அப்போது அவரை எழுந்திருக்க விடாமல், விக்னேஷ் தான் கொண்டு வந்த இரும்புக் கம்பியால் மாரியப்பனைத் தாக்கியதுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததை விசாரணையின் போது விக்னேஷ் தெரிவித்ததாக சரக காவல் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

 

தற்போது பால் வியாபாரி விக்னேஷ், கொலைக்குத் துணை போன கனகா இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிவகிரி நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.