Skip to main content

உன்னுடைய மனைவி என்னோட காதலி...கணவன் செய்த செயல்...திருப்பூரில் பயங்கரம்!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

திருப்பூரில் ஒரே கம்பனியில் வேலை பார்த்த நண்பரிடம் உன்னுடைய மனைவி என்னுடைய காதலி என்று கூறிய இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது,   மதுரையைச் சேர்ந்த கேசவமூர்த்தி, அவரது வீட்டருகே இருந்த சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்பு காதலித்த பெண்ணை திருமணம் செய்ய அந்த பெண் வீட்டில் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.  இதனால் மனமுடைந்த கேசவமூர்த்தி, காதலை மறக்க முடியாமல் சிங்கப்பூர் சென்று வேலைப்பார்த்து வந்துள்ளார். 
 

family problem



ஆனாலும் பழையக் காதலை மறக்க முடியாமல் கேசவமூர்த்தி நாட்டுக்கு திரும்பி வரும் போதெல்லாம் திருப்பூருக்கு சென்று தனது காதலியை சந்தித்துள்ளார். பின்பு சிங்கப்பூர் செல்லாமல் தனது காதலியின் கணவர் பிரகாஷ் வேலை பார்க்கும் பனியன் கம்பெனியில் கேசவமூர்த்தி வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்தவுடன் பிரகாஷுடன் நட்பாக பழகியுள்ளார். இவர்களுடைய  நட்பு இருவரும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளது. இந்த நிலையில் ஒரு நாள் மது குடிக்கும் போது பிரகாஷிடம் உன் மனைவியும் நானும் காதலர்கள் என்றும், அவளை நான் அழைத்து செல்லப் போகிறேன் எனவும் கூறியுள்ளார். அதைக் கேட்டு கோபமடைந்த பிரகாஷ், கேசவமூர்த்தியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கேசவமூர்த்தி கீழே விழுந்துள்ளார். பின்பு அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.