Skip to main content

ரேஷன் கடைக்குப் போனதால யாரும் கண்டுக்கல... இதே ஓட்டுப் போடப் போயிருந்தா தூக்கிட்டுப் போயிருப்பாங்க!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

The humanity of the boys who dragged the bereaved grandmother in a tow cart!

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டியான சுப்புலட்சுமி (வயது 74). கணவர் இல்லாத நிலையில், தனது மகள் ஜெயா துணையோடு வசித்து வருகிறார்.

 

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக நடந்துசெல்ல முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 பரிசுத் தொகையை வாங்க, குடும்ப அட்டையில் உள்ள நபர், கைரேகையைப் பதிய வேண்டும் என்று சொன்னதால், நடக்க முடியாத மூதாட்டி சுப்புலட்சுமி, மகளின் கையைப் பிடித்துக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு 3 மணி நேரம் நடந்துசென்றுள்ளார். பொங்கல் தொகுப்பை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்குச் செல்லமுடியாமல் தவித்துள்ளார்.

 

கொத்தமங்கலம் மேற்கு ரேசன் கடை அருகே நடக்க முடியாமல் மூதாட்டி தவிப்பதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன்கள் நிதின் (வயது 9) நிதிஷ் (வயது 9) ஆகிய இருவரும், வீட்டில் தங்கள் தந்தை வைத்திருக்கும் 3 சக்கர இழுவை வண்டியை இழுத்துவந்து அந்த வண்டியில் மூதாட்டியைப் படுக்க வைத்து, ரேஷன் கடையில் வாங்கிய பொருட்களையும் ஏற்றிக் கொண்டு ஒரு சிறுவன் இழுக்க, மற்றொரு சிறுவன் பின்னால் இருந்து தள்ளிச் சென்று மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். இந்தத் தகவல் அறிந்த பலரும் அந்தச் சிறுவர்களைப் பாராட்டி வருகின்றனர்.

 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "மூதாட்டிக்கு நடக்க முடியவில்லை. ஆனால், அவர் கைரேகைப் பதிவு செய்தால்தான் பொங்கல் தொகுப்பு என்று சொன்னதால், 3 மணி நேரம் நடந்து வந்து பொங்கல் தொகுப்பு வாங்கிய பிறகு வீட்டுக்குப் போக முடியாமல் தவித்தார். அந்த மூதாட்டியால் மோட்டார் சைக்கிளிலும் அமர முடியாத நிலையில், சிறுவர்கள் தங்கள் வீட்டில் நின்ற வண்டியைப் பயன்படுத்தி அழைத்துச் சென்றுவிட்டனர். இதே, வாக்குப் பதிவு நேரம் என்றால், இந்த மூதாட்டியின் ஒரு ஓட்டுக்காக அவரை போட்டிப் போட்டு தூக்கிச் செல்வார்கள். ஆனால், தற்போது அவரது தேவைக்காக நிற்கும் போது யாரும் கண்டுகொள்ளவில்லை" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.