Skip to main content

அரிவாளைக் கையில் வைத்திருந்தார் எச்.ராஜா! வெட்டினார் கருணாஸ் -அமைச்சரின் ‘அடடே’ விளக்கம்!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

ராஜபாளையம் – சத்திரப்பட்டி சாலையில் புதிய ரயில்வே மேம்பாலத்துக்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அப்போது, ஒரு கண்ணில் வெண்ணெய்! இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா? என்கிற ரீதியில்,   எச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தை தமிழக அரசு கையாண்டிருக்கிறதே?  என்று  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் அவர் - 

 

rajendra balaji

 

“தமிழ்நாடு அரசு ஒன்றும் பாரபட்சமாக நடந்துகொள்ளவில்லை. கருணாஸ் பேசிய வார்த்தையின் வீரியம் ரொம்ப அதிகம். கொடூரமானது. யாரும் யாரையும் கொல்லனும்னா என்கிட்ட சொல்லிட்டுக் கொல்லுங்க. கொலை செய்யுங்கன்னு ஒரு கடுமையான வார்த்தையை,  சட்ட மன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர்,  விதிகளுக்கு உட்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பதவியேற்றவர், என்கிட்ட கேட்டுட்டு, சொல்லிட்டு,  கொலை செய்யுங்கன்னு சொல்லலாமா? பிற சமுதாயத்தை அச்சுறுத்துற மாதிரி நடக்கலாமா? அதனாலதான், அவரு மேல நடவடிக்கை உடனே பாய்ந்தது.  மற்றவர்களும் தவறு செய்திருந்தால், அது விசாரணையில் இருக்கும். காவல்துறை விசாரணையில் இருக்கும். கோர்ட் அனுமதியைப் பெறுவார்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.  

 

rajendra balaji

 

அரிவாளைத் தூக்கி கையில் வச்சிருந்தவனுக்கும், அரிவாளால வெட்டியவனுக்கும் வித்தியாசம் இல்லியா? அரிவாளைக் கையில் வச்சிருக்கிறவனை பதறாம பிடிச்சிக்கலாம். வெட்டுறவனைத்தான் மொதல்ல பிடிக்கணும். இவரு வெட்டுவேங்கிறாரு. வெட்டிட்டு வாங்கன்னு சொல்லுறாரு. என்கிட்ட கேட்டுட்டு வெட்டுங்கிறாரு கருணாஸ்.  கருணாஸ் வந்து எப்படி இருந்தாரு? எப்படி வாழ்ந்தாரு? நான் செய்தித்துறை அமைச்சரா இருக்கும்போதே தெரியும். அவரு வந்து அம்மாவால் அங்கீகரிக்கப்பட்டு,  ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளரா திருவாடனைல நிற்கும்போது,  எனக்கு ஒத்துழைப்பே இல்லைன்னு கதறினாரு. இப்ப என்னடான்னா, ஜனாதிபதிய நான்தான் ஜெயிக்க வச்சேங்கிறாரு. இவரோட ஓட்டுலயா அவரு ஜெயிச்சாரு. எல்லாரும் ஓட்டு போட்டோம். நாங்களும் ஓட்டு போட்டோம். என்னுடைய பங்களிப்பு இருக்குன்னு சொல்லலாம். நான்தான் ஜனாதிபதியை ஜெயிக்க வச்சேன்னு சொன்னா, அவ்வளவு பெரிய அதிகாரமா இவருக்கு இருக்கு? கருணாஸுன்னு பேர் இருந்தாலே வந்து,  ஈழத்துல ஒரு கருணா இருந்தான். இப்படித்தான் தமிழர்களைக் காட்டிக்கொடுத்துட்டு.. தமிழர்கள் ரெண்டு லட்சம் பேரு இறப்புக்கு காரணமா இருந்தான். இப்ப எல்லா சமுதாயமும் இணக்கமா இருக்கு. மெட்ராஸ்ல எல்லாரும் இணக்கமா இருக்காங்க. அங்க வந்து தீயைக் கொளுத்திப் போட்ட மாதிரி போட்டு, எப்படியாச்சும் ஒரு கலவரத்தை உண்டாக்கினா.. எப்படியாச்சும் முதலமைச்சர் எடப்பாடி அண்ணனோட அரசுக்கு,  ஒரு கெட்ட பேரு உண்டாக்கலாம்கிற ஒரு கோணத்துல, பல்வேறு வழியிலிருந்தும் ஒரு ஏவுகணை தாக்குதல், அரசியல் தாக்குதல், அதிகார வரம்பை மீறி தாக்குதல், நடந்துக்கிட்டிருக்கு. இந்தத் தாக்குதலையெல்லாம் சமாளிச்சுத்தான், எடப்பாடி அண்ணன் ஆட்சியை நடத்தி வர்றாரு. இந்த ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது. ரெட்டை இலை மகிமை இன்னும் போகல. 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடிக்கும்.” என்றார் அதிரடியாக. 

 

 

எச்.ராஜா, கருணாஸ்..  இருவருமே வாய்ப்பேச்சில் வீரம் காட்டினார்கள். வரம்புமீறி பேசினார்கள். மத்தியில் ஆளும்  பா.ஜ.க.வுக்கு அஞ்சி, எச்.ராஜாவின் குற்றத்தை மட்டும், தங்களுக்கு வசதியாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, என்னமாய் வெண்டைக்காய் விளக்கம் தந்திருக்கிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'தினம் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பதே அவரின் திட்டம்'-கருணாஸ் பரப்புரை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'His plan is to lie 10 days a day' - Karunas lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.