Skip to main content

தீ விபத்தில் சேதமான வீடுகள்... நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ.!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Houses damaged in fire

 

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காணை தெற்கு ஒன்றியம் மாம்பழப்பட்டு ஊராட்சியில் பழனி, பஞ்சன் ஆகியோரின் வீடுகள் எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் எரிந்து சேதமாகின. இதனை அறிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தி எம்.எல்.ஏ., நேரில் சென்று நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். 

 

காணை தெற்கு ஒன்றியச் செயலாளர் கல்பட்டு இராஜா மற்றும் மாவட்ட கவுன்சிலர் சிவகுமார், விவசாய அணி துணை அமைப்பாளர் பாபு ஜீவானந்தம், முன்னாள் துணைத் தலைவர் முருகவேல், காணை தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் முருகன், துணைச் செயலாளர்கள் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்