Skip to main content

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக என்.ராம் நியமனம்!

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
Hindu n.ram elected head of alliance of media freedom



ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக என்.ராம் நியமிக்கப்பட்டார்.
 

பல்வேறு ஊடகவியலாளர் அமைப்புகளும் ஊடக நிறுவனர்களும் ஊடக நிறுவனங்களும் செய்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி, தி ஹிந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராமை கூட்டணியின் தலைவராக நியமித்தது. 
 

ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அரசுகளும் ஆதிக்கச் சக்திகளும் செயல்பட்டபோது அவற்றை வெற்றிகரமாக முறியடித்த என்.ராமின் பணியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி பாராட்டுகிறது.
 

ஊடக செய்தி ஆசிரியர்கள், நிறுவனர்கள், செய்தியாளர்கள் 16 பேர் பங்கேற்ற ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் கூட்டம் திங்கள் கிழமை (ஜனவரி 7, 2019) நடைபெற்றது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 124வது பிரிவின் கீழ் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது என்று தீர்ப்பளித்த சென்னைக் குற்றவியல் நடுவர் மன்ற நடுவரின் தீர்ப்பை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி வரவேற்று வாழ்த்துகிறது.

 

Hindu n.ram elected head of alliance of media freedom


 

கடந்த ஏழு மாதங்களாக அமைப்பின்றி செயல்பட்டு வந்த ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியை அமைப்பாக்குவதற்கான தீர்மானம் ஒன்றையும் ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி ஒருமனதாக நிறைவேற்றியது. 
 

ஊடக சுதந்திரத்தைப் பேணுவதையும் கடைசி பத்திரிகையாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் முதன்மையான நோக்கங்களாக கொண்ட ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி தனது சாசனத்தை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றியது. இந்திய அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள பேச்சு சுதந்திரத்தைப் பேணுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதே இந்தச் சாசனத்தின் அடிநாதம்.    

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜின்னாவை கொல்ல முயன்றது பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்...” - செங்கோல் விவகாரத்தில் இந்து என். ராம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

"Mountbatten has talked about Jinnah's attempt.." - Hindu N. Ram

 

‘1947 ஆகஸ்ட் 15ல் நடந்தது என்ன?’ எனும் தலைப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினர். இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “செங்கோல் விவகாரத்தில் பல கட்டுக்கதைகள் அரசியலில் வந்துள்ளன. உண்மைகள் என்ன என்று தெரிய வேண்டும். எது நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும். 

 

சுதந்திரம் இந்தியாவிற்கு கொடுக்கும் நிகழ்வை எப்படி நடத்தலாம் என மவுண்ட்பேட்டன், நேருவிடம் கேட்டதாக பாஜக சொல்கிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மவுண்ட்பேட்டனை பற்றி பலர் ஆய்வு செய்துள்ளனர். எதிலும் இது குறிப்பிடப்படவில்லை. மவுண்ட்பேட்டன் இருந்த இந்தியா குடியரசாக ஆகவில்லை. வைஸ்ராய் என்றால் மன்னரின் பிரதிநிதி. அவர் கவர்னராக ஆகும்போது அனைத்தும் மாறும். எனவே மவுண்ட்பேட்டன் நேருவிடம் கேட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. மவுண்ட்பேட்டன் 1968 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றில் உரையாற்றினார். அந்த உரையில், நேருவிடம் இப்படி கேட்டது செங்கோல் என எந்த ஒரு வார்த்தைகளும் இல்லை. ஜின்னாவை கொல்ல முயற்சித்தது குறித்தெல்லாம் பேசுகிறார். ஆனால் செங்கோல் குறித்து ஒன்றும் பேசவில்லை. இவை அனைத்தும் கட்டுக்கதை. ஆதீனங்கள் நேருவைப் பார்த்தது உண்மை. அதற்கு ஆதாரங்களும் உள்ளது. ஆனால் அவர்கள் கதையில், மவுண்ட்பேட்டன் நேருவை கேட்டபோது ராஜாஜியிடம் பேசினார் என்றும் ராஜாஜி திருவாவடுதுறை ஆதீனத்திடம் பேசியது செங்கோல் தயாரிக்க சொன்னது அது பற்றியெல்லாம் அரசு இணையத்தில் உள்ளது.

 

ஆனால் செங்கோல் எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? அதற்கும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்றால் இல்லை. ஆட்சி மாற்றத்தினை குறிப்பிடுவது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய சுதந்திரச் சட்டம் தான். நேருவை இந்தியாவின் பிரதமராக வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் முன்மொழிந்த உடன் இந்தியா சுதந்திர நாடாக மாறியது. அடுத்த நிமிடமே அப்படி நடந்தது. இதுவே நடந்தது. ஆகஸ்ட் 14, 1947ல் காலை 8 மணிக்கு கராச்சிக்கு செல்கிறார் என்றும் 7 மணிக்கு மீண்டும் விமானத்தில் இந்தியா திரும்புவார் என்றுதான் மவுண்ட்பேட்டனின் அன்றைய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிடப்பட்டிருப்பது போல் அல்லாமல் 13 ஆம் தேதியே மவுண்ட்பேட்டன் கராச்சி செல்கிறார். எனவே ஆதினங்கள் மவுண்ட்பேட்டனை பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆதினங்களுக்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அன்றைய இந்து நாளிதழில் ஆகஸ்ட் 29, 1947 அன்று ஆதினம் விளம்பரம் கொடுத்துள்ளனர். அதில் திருவாவடுதுறை ஆதீனங்கள் சார்பில் நேருவுக்கு செங்கோல் கொடுத்ததாக 3 புகைப்படங்கள் உள்ளது.

 

அதன்படி 14 ஆகஸ்ட் 1947 அன்று இரவு 10 மணிக்கு நேருவின் இல்லத்தில் வைத்து செங்கோல் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தில் போகவில்லை. ஆகஸ்ட் 11 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியதாக கூறியுள்ளனர். அதில் குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார், ராமலிங்கம் பிள்ளை, சுப்பையா பாரதியார், ஆதீனம் வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் சென்றதாக புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது” எனக் கூறினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சி ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

Next Story

பெகாசஸ் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

SUPREME COURT

 

உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்தப் பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் தெரிவித்தன.

 

இதனையடுத்து, இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேநேரத்தில் இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே கடந்த 26ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு பேர் கொண்ட ஆணையத்தை அமைத்தார்.

 

மேலும், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என். ராம், ஏசியாநெட் சசிகுமார் ஆகிய இருவரும் பெகாசஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.