Skip to main content

கனமழை; ‘பள்ளிகளுக்கு விடுமுறை’ - ஆட்சியர் அறிவிப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
heavy rain; 'Holiday for schools' - Collector's announcement

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (26.06.2024) வெளியிட்டிருந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (27.06.2024) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இரு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றும் (26.06.2024) விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்