Skip to main content

சுகாதாரத்துறை ரெய்டு! சிக்கிய கருக்கலைப்பு நிலையம்! தப்பிய தம்பதி! 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Health Department Raid! Trapped Abortion Center in cuddalore district

 

கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் உள்ள தனியார் மெடிக்கலில் கடந்த 5-ஆம் தேதி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி அனிதா(27) என்ற பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அனிதா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 07-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மெடிக்கல் உரிமையாளர் முருகன்(52) தலைமறைவானார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகனை தேடிவருகின்றனர்.

 

இந்நிலையில், ராமநத்தத்தில் முருகன் நடத்தி வந்த மெடிக்கலை கடலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவக்குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ராமநத்தம் தனியார் கட்டடத்தில் மூன்று பெரிய அறைகள் கொண்ட கட்டடத்தை வாடகைக்கு எடுத்த முருகன் மருத்துவமனை போலவே நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும் மருந்தகம், உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை, மினி ஆப்ரேஷன் தியேட்டர் செயல்பட்டதற்கான அறிகுறிகளும் ஆய்வில் தெரிந்தது. அதேசமயம் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பல மர்மமான முறையில் அங்கிருந்து எடுத்து சென்றிருப்பதும் தெரிந்தது. ஆய்வின் போது திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சேபானந்தம், தொழுதூர் அரசு மருத்துவர் கொளஞ்சிநாதன் மற்றும் சுகாதாரத்துறையினர், ராமநத்தம் காவல் ஆய்வாளர் ஜெய்கீர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தலைமறைவாக உள்ள முருகனைக் கைது செய்தால் தான் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்பதால், அவரைத்தேடும் பணியில் ராமநத்தம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Health Department Raid! Trapped Abortion Center in cuddalore district

 

இதனிடையே இந்த கருக்கலைப்பு சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் கருக்கலைப்பு குறித்த ஆய்வினை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று வேப்பூர், திட்டக்குடி, ராமநத்தம், மங்களூர் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது மங்களூர் கிராமத்தில் ஒரு வீட்டில் வைத்து பெண்ணிற்கு கருக்கலைப்பு நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை. அதையடுத்து அங்கு சென்ற போது மங்களூர் சிவன் கோவில் தெருவில் உள்ள அன்பழகன் மகன் குமார்(48) என்பவரது வீட்டின் மாடியிலுள்ள அறையில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு குமார் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகிய இருவரும் 23 வயதுள்ள ஒரு பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து உட்கார வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டு மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதேசமயம் ஆய்வுக்கு சென்ற மருத்துவ குழுவினரை பார்த்ததும் குமார் மற்றும் அவருடைய மனைவி சித்ரா ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த குமார் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் கைது செய்ய சிறுபாக்கம் உதவி ஆய்வாளர்க்கு மருத்துவத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற தம்பதியை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.