Skip to main content

“150 மெடலுக்கு மேல் வாங்கி ஒலிம்பிக் வரை போய் வந்துவிட்டேன்” - நம்பிக்கை தரும் மாற்றுத்திறனாளி

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

 disabled youth video goes viral social media

 

நான் 150 மெடலுக்கு மேல வாங்கிட்டேன். ஒலிம்பிக் போட்டிக்கும் போய் வந்துட்டேன் என, ஒற்றைக் கையுடன் நம்பிக்கையோடு பேசும் மாற்றுத்திறனாளி இளைஞரின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிக்கு அருகே உள்ளது கீரமங்கலம். இந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக மாரத்தான் போட்டி நடைபெற்றது. சுமார் 400 பேர் கலந்துகொண்ட மாரத்தான் போட்டியில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்  கலந்துகொண்டு பச்சைக்கொடி காட்டி  போட்டியைத் தொடங்கி வைத்தார்.

 

அப்போது, இந்த மாரத்தான் போட்டி குறித்து அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது ''விழிப்புணர்வுகளை ஏற்படுத்த பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றுதான் மாரத்தான். விளையாட்டுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, நம்முடைய உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களின் பார்வையும் திரும்புகிறது. அதனால்தான், மாரத்தான் விழிப்புணர்வு சிறப்பாக உள்ளது'' எனப் பேசியுள்ளார்.

 

இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் முதல்முறையாக ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்டனர். 21 கி.மீ மற்றும் 10 கி.மீ தூரத்தை முழுமையாகக் கடந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர். அதுமட்டுமல்லாமல், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 37 வயதான கலைச்செல்வன். ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞரான இவர் 21 கி.மீ தூரத்தையும் முழுமையாக ஓடி வந்தார்.

 

அப்போது அவர் கூறும்போது ''கடந்த 1999 ஆம் ஆண்டில் நடந்த ஒரு விபத்தில் என்னோட ஒரு கை அகற்றப்பட்டது. அதிலிருந்து, என்னுடைய 40 வயதுக்குள் 400 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடித்தேன். ஆனால் 37 வயதிலேயே 400 மாரத்தான்களை கடந்துவிட்டேன். அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற 401ஆவது மாரத்தானில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்த போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது'' என மாற்றுத்திறனாளி இளைஞரான கலைச்செல்வன்  பேசியிருந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.